இந்தியாவில் மொபைல் மெசேஜிங்கிற்காக புதிய குட்-5 மென்பொருளை மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
புதியவகை மென்பொருளானது மொபைல் சந்தையில் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் நியூஸ் ஃபீட்ஸ், மின்னஞ்சல்களுக்கான முன்னறிவிப்பு, பில்டர்ஸ், முழு அளவிலான சோதனை, தானாகவே இயங்கக்கூடிய கான்பரன்ஸ் அறை தேடுதல் உள்ளிட்ட சிறப்பம்சங்களை புதிய மென்பொருள் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
மின்னஞ்சல் பயன்பாடு முதல் பரிவர்த்தனை அடிப்படையிலான பயன்பாடுகள் வரை மோட்டோரோலா குட் தொழில்நுட்பத்தில் எளிதில் இடம்பெற்றிருக்கும் என்றும், எந்தநேரத்திலும், தகவல் தொடர்பு கருவிகளுடன் கிடைக்கும் என்றும் மோட்டோரோலா இந்தியாவின் மேலாளர் அனிருத் குப்தா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment