கோவையைச் சேர்ந்த கேஜிஐஎஸ்எல் குழுமம் இந்தியா லேண்ட் நிறுவனத்துடன் இணைந்து கோவையில் முதல் தனியார் தகவல் தொழில் நுட்பப் பூங்காவை அமைக்க உள்ளது.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியா லேண்ட் நிறுவனத்தலைவர் ஹரீஷ் பாபியானி, கேஜிஐஎஸ்எல் குழும நிர்வாக இயக்குநர் அசோக் பக்தவத்சலம் ஆகியோர் இதனைத் தெரிவித்தனர்.
இந்த தகவல் தொழில்நுட்பப் பூங்கா, கோவை சரவணன்பட்டியில் 150 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. 11.74 ஏக்கர் நிலத்தில் மொத்தம் 18 லட்சம் சதுர அடியில் இந்தியா லேண்ட் கேஜிஐஎஸ்எல் தொழில்நுட்பப் பூங்கா உருவாக்கப்பட்டு வருவதாகவும், 320 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
இத்தொகையில் 70 சதவீதத்தை இந்தியா லேண்ட் முதலீடு செய்யும். இதன் முதல் கட்டப் பணிகள் வரும் ஜூலை மாதத்தில் நிறைவடையும். இறுதி கட்டப் பணிகள் அக்டோபர் மாதத்தில் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment