
ரயில்வே நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பயணிகள் பயணச்சீட்டுக்கான கட்டணக் குறைப்பு இன்று முதல் அமலாகிறது. இதற்கிடையில் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் செலுத்திய கூடுதல் தொகை திரும்ப வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் ரயில்வே அமைச்சர் லாலுபிரசாத் யாதவ் மக்களவையில் தாக்கல் செய்த 2008-09ம் ஆண்டுக்கான ரயில்வே நிதிநிலை அறிக்கையில், 2ம் வகுப்பு பயணிகள் கட்டணம் 5 சதவீத அளவுக்கு குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில் குறைக்கப்பட்ட புதிய கட்டணங்களின் படி இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், இதற்கேற்றவாறு கணினிகளில் கட்டண விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டு உள்ளதாகவும் ரயில்வேத் துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஏப்ரல் 1ம் தேதி மற்றும் அதற்கு பின்னர் பயணம் செய்வதற்காக ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள், தங்களுக்கு வழங்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து முன்பதிவு மையங்களில் செலுத்தி, கூடுதலாக வழங்கிய தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment