Search

Custom Search

Wednesday, April 2, 2008

பிரதமரை சந்திக்கிறார் கர்நாடக ஆளுநர்

ராமேஷ்வர் தாக்கூர்
ஒகேனக்கல் விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் அசாதாரண சூழ்நிலையில் நிலவும் நிலையில், பிரதமர் மன்மோகன்சிங்கை மாநில ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர் இன்று சந்திக்கிறார்.
பிரதமரை உடனடியாக சந்திக்கும்படி தலைநகரில் இருந்து நேற்றிரவு அழைப்பு வந்ததாகவும், இதையடுத்து இன்று காலை புதுடெல்லிக்கு ஆளுநர் செல்லவிருப்பதாகவும் ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று பிற்பகல் வாக்கில் பிரதமர் மன்மோகன்சிங்கை ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர் சந்திப்பார் எனத் தெரிகிறது.
கர்நாடக சட்டம்- ஒழுங்கு நிலை, தமிழர்களின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆளுநரிடம் பிரதமர் கேட்டறிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோனியா- எஸ்.எம். கிருஷ்ணா ஆலோசனை
இதற்கிடையே, ஒகேனக்கல் விவகாரம் தொடர்பாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எம்.எம். கிருஷ்ணாவுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
புதுடெல்லியில் நேற்று மாலை நடந்த இச்சந்திப்பின்போது, ஒகேனக்கல் விவகாரத்தை பயன்படுத்தி பாரதிய ஜனதா ஆதயம் தேட முற்படுவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

No comments: