ஒகேனக்கல் குடிநீர் திட்ட பிரச்சினையால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் - கர்நாடக மாநிலங்களுக்கு இடையே பாதிப்புக்குள்ளாகியிருந்த பேருந்து போக்குவரத்து நேற்று முதல் சீராக இயங்கத் தொடங்கியது.
இரு மாநிலங்களிலும் பரஸ்பரம் மற்ற மாநில பேருந்துகள் மீது தாக்குதல்கள் நடைபெற்றன.
இதனால் மாநில எல்லைகளான சத்தியமங்கலம், ஒசூர் உள்ளிட்ட பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் தமிகழத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் அரசு பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன.
இதற்கிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு முதல் அமைச்சர் கருணாநிதி, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரை அமைதி காப்போம் என்று கூறியதைத் தொடர்ந்து பதற்றம் தணியத் தொடங்கியது.
இதையடுத்து நேற்று முதல் தமிழக அரசுப் பேருந்துகள், கர்நாடக மாநிலத்திற்கும், அங்கிருந்து தமிழகத்திற்கும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. இதனால் இரு மாநிலங்களுக்கும் செல்லும் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
No comments:
Post a Comment