Search

Custom Search

Wednesday, April 2, 2008

தமிழகத்தில் கன்னட சேனல்களுக்கு தடை பிளாஸ்மா டிவி

பிளாஸ்மா டிவி
ஒகேனக்கல் விவகாரத்தில் கன்னட அமைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த மொழி தொலைக்காட்சி சேனல்களின் ஒளிபரப்பு, தமிழகத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
இதுகுறித்து தமிழக கேபிள் டிவி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் காயல் இளவரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் திரைப்படத் துறையினர் வரும் 4ம் தேதி சேப்பாக்கத்தில் நடத்தும் உண்ணாவிரத்ததில் கேபிள் டிவி சங்கங்களும் கலந்து கொள்ளும் என்றார்.
ஒகேனக்கல் விவகாரத்தில் கன்னட அமைப்புகளின் போக்கை கண்டிக்கும் வகையில் தமிழகத்தில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து கன்னட சேனல்களையும் தடை செய்யும்படி கேபிள் ஆபரேட்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் காயல் இளவரசு கூறினார்.
கர்நாடக மாநிலத்தில் ஒளிபரப்பாகி வந்த தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் இன்று முதல் நிறுத்தப்படுவதாக, கன்னட அமைப்புகள் அறிவித்து இருந்தன.
அதற்கு பதிலடி தரும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

No comments: