Search

Custom Search

Friday, April 18, 2008

'மின்னணு கழிவு அதிகரிக்கும் அபாயம்'

பொருளாதார வளர்ச்சி மற்றும் மின்னணு பொருள் பயன்பாடு அதிகரிப்பால், நாட்டின் மின்னணு கழிவு (E-waste) வரும் 2012ம் ஆண்டில் 8 லட்சம் டன்னாக உயரும் என வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது இத்தகவலை தெரிவித்த அவர், மின்னணு கழிவுகளால் ஏற்படும் அபாயத்தை அரசு உணர்ந்துள்ளதாகவும், இதனை குறைக்க மறுசுழற்சி முறையை சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் நாட்டு மின்னணு கழிவுகளை இந்தியாவில் கொட்டுவதாக எழுந்துள்ள புகார் குறித்த கேள்விக்கு, அபாயகரமான மின்னணு கழிவுகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதிப்பதில்லை என தெரிவித்த அவர், இவ்விஷயத்தில் அரசு கடுமையான விதிகளை வகுத்துள்ளதாக பதிலளித்தார்.
கடந்த 2005ம் ஆண்டில் நாட்டின் மின்னணு கழிவு 1.5 டன்னாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: