![]() |
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் தீபத்தைக் கொண்டுவருவதற்கு கலவரக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் திங்கட்கிழமையன்று 2-வது முறையாக தீபத்தை அணைத்தனர்.
பின்னர் அந்த தீபம் மீண்டும் ஏற்றப்பட்டது.
திபெத் விடுதலை கோரி ஒலிம்பிக் தீபத்தை கொண்டு வருவதற்கு பாரீசில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ஒலிம்பிக் தீபம் பலத்த பாதுகாப்புடன் பேருந்து ஒன்றில் கொண்டுவரப்பட்டது. என்றாலும் கடுமையான எதிர்ப்பின் காரணமாக தடகள வீரர் ஒருவர் சக்கர நாற்காலியில் கொண்டுவந்த தீபத்தை பாதுகாப்புப் படையினர் இன்று 2-வது முறையாக அணைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரீசில் உள்ள போக்குவரத்து சுரங்கப்பாதையில் இந்த தீபம் கொண்டுவரப்பட்டது.
திபெத்திற்கு ஆதரவாக சிலர் போராட்டத்தில் ஈடுபட்டதால், தீபம் அணைக்கப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் ஒலிம்பிக் தீபம் தொடர்ந்து கொண்டு செல்லப்பட்டது.

No comments:
Post a Comment