
பாலிவுட் நட்சத்திர ஜோடியான ஜஸ்வர்யாராய்- அபிஷேக் பச்சன் இருவரும் தங்கள் முதல் திருமண நாளை மியாமியில் கொண்டாட உள்ளனர்.
'தோஸ்தானா' என்ற ஹிந்திப் படத்தின் படப்பிடிப்பிற்காக அபிஷேக் பச்சன் மியாமி சென்றுள்ளதாக தெரிவித்த அபிஷேக்கின் தந்தை அமிதாப்பச்சன், விரைவில் ஐஸ்வர்யாராயும் மியாமி செல்வார் என்றார்.
இதற்கிடையில், ஐஸ்-அபிஷேக் திருமண நாளான ஏப்ரல் 20ம் தேதி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா, அபிஷேக் நடித்த 'சர்க்கார் ராஜ்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை, அப்படத்தின் இயக்குனர் ராம்கோபால் வர்மா வைத்துள்ளார்.
மியாமியில் இருந்தபடியே 'ஸ்கை-ஸ்கேப்' என்ற நவீன தொழில்நுட்பம் மூலம் வீடியோ கான்பரன்ஸ் வசதியில், ஐஸ்வர்யா-அபிஷேக் தம்பதியர் இந்த விழாவில் பங்கேற்பர் என்றும் ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment