Search

Custom Search

Monday, April 14, 2008

அஜ்மலை பாராட்டிய கமல்

அஞ்சாதே' புகழ் அஜ்மல் வானத்திற்கும் பூமிக்கும் குதியாய் குதிக்கிறார். சந்தோஷத்தில் மனிதருக்கு தலை- கால் புரியவில்லை.
வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் கிடைப்பது என்பது சும்மாவா? ஆமாம்! அண்மையில் திரையுலம் நடத்திய உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டிருக்கிறார் அஜ்மல். மேடையில் அவரை அடையாளம் கண்டு கொண்ட கமல், அஞ்சாதே படத்தில் அஜ்மலின் நடிப்பை ஏகத்திற்கு புகழ்ந்து தள்ளியுள்ளார்.
ஏற்கனவே கமல் ரசிகரான அஜ்மல், அவரை பார்ப்பதே பெருமையாக கருதி வந்த நிலையில், கமல் வாயால் பாராட்டையும் பெற்றுவிட்டார் என்றால் எப்படி இருந்திருப்பார் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

No comments: