இணையதள சேவை வழங்கி வரும் நிறுவனமான சிஃபி, ஐ-பாஸ் நிறுவனத்துடன் இணைந்து அதிவேக பிராட்பேண்ட் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த புதிய சேவை மக்கள் அதிகம் கூடும் இடங்களான விமானநிலையம், உணவு
விடுதிகள், சில்லரை வணிக வளாகங்கள் என ஒரு லட்சம் இடங்களில் (சர்வதேச
அளவில்) கிடைக்கும் என்று சிஃபி (Sify) நிறுவனத்தின் நிர்வாக தலைவர் நாத்
செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
விடுதிகள், சில்லரை வணிக வளாகங்கள் என ஒரு லட்சம் இடங்களில் (சர்வதேச
அளவில்) கிடைக்கும் என்று சிஃபி (Sify) நிறுவனத்தின் நிர்வாக தலைவர் நாத்
செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
'ரோம் கனெக்ட் இன்டர்நேஷனல்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய
சேவையை பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் தங்களின் மடிக்கணினிகள்,
செல்போன்கள் மூலம் இணைய சேவையை பயணத்தின் போதே பயன்படுத்த முடியும் என்பதே
இதன் சிறப்பம்சம்.
செல்போன்கள் மூலம் இணைய சேவையை பயணத்தின் போதே பயன்படுத்த முடியும் என்பதே
இதன் சிறப்பம்சம்.
இந்திய இணையதள சேவைச் சந்தை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில்
செல்வதால், ஐ-பாஸ் நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும், இதன் ஒரு
பகுதியாகவே சிஃபி நிறுவனத்துடன் இணைந்து 'ரோம் கனெக்ட் இன்டர்நேஷனல்'
பிராட்பேண்ட் சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியதாகவும் ஐ-பாஸ் நிறுவன
மூத்த அதிகாரி ஷீ-லெங் லாய் தெரிவித்தார்.
பகுதியாகவே சிஃபி நிறுவனத்துடன் இணைந்து 'ரோம் கனெக்ட் இன்டர்நேஷனல்'
பிராட்பேண்ட் சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியதாகவும் ஐ-பாஸ் நிறுவன
மூத்த அதிகாரி ஷீ-லெங் லாய் தெரிவித்தார்.
No comments:
Post a Comment