கணினி மூலம் இணையதளத்திற்குள் செல்வது போல், தற்போது செல்பேசி மூலம் இணையதளத்திற்குள் செல்லும் நடவடிக்கை அதிகரித்துள்ளது.
சிங்கப்பூரில் நடைபெற்ற "கம்யூனிக் ஆசியா கருத்தரங்கில்" இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதள நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வண்ணம் தயாரிக்கப்படும் செல்பேசிகளின் விலையும் தற்போது குறைந்து வருகிறது. மாறாக கணினி விலைகள் அல்லது லேப்-டாப் விலைகள் இதனை ஒப்பு நோக்குகையில் சற்று அதிகமாகவே உள்ளது.
ஒரு மெகாபைட் தரவைப் பெற ஆகும் செலவு, மொபைல் இண்டர்நெட்டில் மிகவும் குறைவாகவே உள்ளது என்று அந்த கருத்தரங்கில் ஆலோசனை நிறுவனமான மெக்கின்ஸி நிறுவனத்தின் அதிகாரி ஆந்ரே லிவிஸ் கூறுகிறார்.
இணையதள இணைப்புகளுக்கு ஆகும் செலவுகளும் குறைந்துள்ளன. இதனால் மொபைல் இணையதள நடவடிக்கைகள் பெருகினால் விளம்பரத்துறை அதை நோக்கி வரும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்றே இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசியவர்கள் பெரும்பாலும் கூறினர்.
எனவே முதல் முறையாக இணையதளம் செல்பவர்கள் செல்பேசி வழியாகவே செல்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
இந்த கருத்தரங்கின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க நோக்கியா நிறுவனம் வர்த்தகப் பயனாளர்களுக்காக மின்னஞ்சல் பயன்பாடு கொண்ட இரண்டு செல்பேசி மாடல்களை அறிமுகம் செய்தது.
தென் கொரியாவின் சாம்சங் நிறுவனம் டச்-ஸ்க்ரீன் மாடலில் புதிய ஸ்மார்ட் ஃபோனை அறிமுகம் செய்துள்ளது.
கடந்த வாரம் ஆப்பிள் நிறுவனம் அதிகபட்ச பயன்பாடுகளுக்கான 3ஜி செல்பேசியை அறிமுகம் செய்துள்ளது. இதில் துரிதமாக இணையத்தை அணுகும் வசதிகளும், மேலும் பிற பயனாளர் சார்பான விஷயங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆனால் செல்பேசியில் பொருளடக்கங்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் மிகப்பெரிய மீடியாக்கள் இன்னமும் இந்த செல்பேசி வாசக தளம் பற்றி கண்டு கொள்ளாமல் இருக்கிறது என்று ருபெர்ட் முர்டாக்கின் நியூஸ் கார்ப்பரேஷன் குழுமத்தைச் சேர்ந்த ஒரு ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நவீன வளர்ச்சிகளால் மொபைலில் விளம்பரம் என்ற தொலை தூரக் கனவு நினைவாகும் சாத்தியங்கள் பெருகியுள்ளதாக கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment