Search

Custom Search

Monday, June 2, 2008

சிறார்களைக் குஷிப்படுத்தும் `நார்னியா ரிட்டன்ஸ்'

'நார்நியா ரிட்டன்ஸ்'
அமெரிக்காவில் குழந்தைகளுக்காக வால்ட் டிஸ்னி நிறுவனம் வெளியிட்ட எஸ்.சி.லுயிஸ் எழுதிய தி குரோனிக்கல்ஸ் ஆப் நார்நியா நாவலின் 2ம் பாகம், `நார்நியா ரிட்டன்ஸ்' என்ற பெயரில் திரைப்படமாக வந்துள்ளது.
நார்நியா நாட்டின் ராஜாவைக் கொலைசெய்து விட்டு ஆட்சியைப் பிடிக்கிறார் அவரது தம்பி மிராஸ். அவருக்கு டெர்மைன் வீரர்கள் உதவுகின்றனர்.
அவரை எதிர்த்து இளவரசர் காஸ்பியன் போராடுவதே கதை. பீட்டர் தலைமையில் இங்கிலாந்தில் இருந்து வரும் எட்மண்ட், சூசன், லுசி ஆகியோர் இளவரசருக்கு உதவுகின்றனர்.
பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு மிராஸின் கோட்டைக்குள் நார்நியர்கள் நுழைந்து தாக்குகின்றனர். இருப்பினும் ஒரு கட்டத்தில் டெர்மைன்களின் கை ஓங்குகிறது. அங்கிருந்து பாதி நார்நியர்களே தப்ப முடிகிறது. மற்றவர்கள் கொல்லப்படுகின்றனர். இதையடுத்து நார்நியர்களின் கோட்டையை மிராஸ் படைகள் தாக்க வருகின்றன.
சண்டையில் அப்பாவி மக்கள் மடிவதற்குப் பதில் நாம் இருவரும் மோதுவோம். யார் ஜெயிக்கிறார்களோ அந்த படைகள் வெற்றி பெற்றதாக அறிவிப்போம் என்று மிராஸிடம் கூறுகிறார் பீட்டர். இந்த சவாலை மிராஸ் ஏற்க, இருவருக்கும் கடும் வாள் சண்டை நடக்கிறது.
முடிவில் மிராஸை பீட்டர் வீழ்த்துகிறான். மிராஸை கொல்லும் வேலையை இளவரசன் காஸ்பியனிடம் பீட்டர் கொடுக்கிறான். மிராஸிற்கு காஸ்பியன் உயிர் பிச்சை அளிக்கிறான். ஆனால் மிராஸின் தளபதியே மிராஸை கொலை செய்துவிட்டு, நார்நியர்களை தாக்குமாறு டெர்மைன்களுக்கு உத்தரவிடுகிறான். இரு தரப்பிற்கும் கடும் சண்டை நடக்கிறது.
இடைப்பட்ட நேரத்தில் காட்டுக்குள் செல்லும் லுசி, "அஸ்லான்' என்ற சக்திவாய்ந்த சிங்கத்தை அழைத்து வருகிறாள். சிங்கம் ஆணையிட்டதும் காட்டில் உள்ள மரங்கள் எல்லாம் உயிர் பெற்று வந்து, டெர்மைன்களை துவம்சம் செய்கின்றன.
அங்கிருந்து டெர்மைன்கள் தப்பித்து, அருகில் உள்ள ஆற்றுக்கு செல்கின்றனர். அங்கு வரும் அஸ்லான், ஆறுகளுக்கான கடவுளை அழைத்து, பிரளயத்தை ஏற்படுத்தி, பெரும்பாலான டெர்மைன்களை அழிக்கிறது. முடிவில் காஸ்பியனிடம் நார்நியாவை ஒப்படைத்து விட்டு, 4 இளைஞர்களும் ஊர் திரும்புகின்றனர்.

கொஞ்சம் கதையை சுருக்கியிருந்தால் இன்னமும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.
படத்தில் வரும் குதிரை மனிதர்கள், பேசும் சிங்கம் போன்றவை குழந்தைகளை குஷிப்படுத்தக் கூடியவை. படத்தில் காமெடியனே ஒரு பேசும் சுண்டெலி தான். நடக்கும் மரங்கள், கொந்தளிக்கும் ஆறு, மலை உச்சியில் இருக்கும் கோட்டை போன்றவை கிராபிக்சின் கைவண்ணங்கள்.
ஆண்ட்ரூ இயக்கி உள்ள படத்தில், பீட்டராக வில்லியம் மூஸ்லே, சூசனாக அன்னா பாப்பிள்வெல், எட்மண்டாக ஸ்காண்டர் கெய்ன்ஸ், லுசியாக ஜார்ஜி ஹென்லே, காஸ்பியனாக பென் பார்ன்ஸ், அரசர் மிராஸாக செர்ஜியோ ஆகியோர் நடித்துள்ளனர்.
கோடை விடுமுறை முடியும் தருவாயில், நார்னியா ரிட்டர்ன்ஸ் படம், சிறுவர் - சிறுமிகளை குஷிப்படுத்துவதாக அமையும் என்பதில் ஐயமில்லை.

No comments: