![]() |
உலகின் முன்னணி மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து பில்கேட்ஸ் இன்றுடன் விலகுகிறார்.
பல இளைஞர்களுக்கு ஊக்கமும், தொழிலதிபர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கிய பில்கேட்ஸ், கடந்த 1975ல் உலகிறகு அறியப்படாத 20 வயது இளைஞனாக இருந்த போது துவக்கிய நிறுவனம் தான் மைக்ரோசாப்ட்.
இதில் கிடைத்த வருவாய் மூலம் கடந்த 1994ம் ஆண்டில் அமெரிக்காவின் நம்பர்-1 பணக்காரர் என்ற பெருமையை பில்கேட்ஸ் அடைந்தார். அதே ஆண்டில் அவருக்கு விலைமதிப்பில்லாத மற்றொன்றும் கிடைத்தது. அது அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ்.
திருமணமான ஒரு ஆண்டில் உலகின் நம்பர்-1 பணக்காரர் என்ற பெருமையையும் பில்கேட்ஸ் பெற்றார். கடந்த 1995 முதல் 2007ம் ஆண்டு வரை உலகின் நம்பர்-1 பணக்காரர் என்ற பெருமையை பில்கேட்ஸ் தக்க வைத்துக் கொள்வதற்கு பெரும் உதவியாக இருந்தது மைக்ரோசாப்ட் நிறுவனமும் அதன் திறமையான ஊழியர்களும்.
இன்று (ஜூலை 27ம் தேதி) பதவி விலகப் போவதாக கடந்த 2006ம் ஆண்டு ஜூன் மாதமே பில்கேட்ஸ் விருப்பம் தெரிவித்த பில்கேட்ஸ், தனது எதிர்காலத்தை உலக சுகாதாரம் மற்றும் வளர்ச்சித் திட்டத்திற்காக (கேட்ஸ் அறக்கட்டளையின் நலத்திட்டம்) அர்ப்பணிக்க உள்ளதாக கூறினார்.
இன்று உலகளவில் பயன்படுத்தப்படும் கணினிகளில் 90 சதவீதம், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மென்பொருட்கள் தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
உலகமயமாக்கல் காரணமாக மென்பொருள் வளர்ச்சித்துறையில் தற்போது பல்வேறு நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், இத்துறைக்காக பில்கேட்சின் பங்களிப்பையும், அவர் ஏற்படுத்திய மென்பொருள் புரட்சியையும் உலக மக்கள் நீண்டநாள் நினைவில் வைத்திருப்பார்கள்.

No comments:
Post a Comment