Search

Custom Search

Wednesday, August 27, 2008

நடிகை ர‌ம்பா த‌ற்கொலை முய‌ற்‌‌சி? மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி!

பிரபல நடிகை ரம்பா செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள மருத்துவமனையில் நே‌ற்று அனுமதிக்கப்பட்டார். அவர் தற்கொலை‌க்கு முய‌ன்றதாக ‌சி‌னிமா வ‌ட்டார‌த்த‌ி‌ல் பரபர‌ப்பாக பேச‌ப்படு‌கிறது.

ஒரு கால‌த்‌தி‌ல் த‌மி‌‌‌ழ்‌த் ‌திரையுல‌கி‌ல் மு‌ன்ன‌ணி கதாநாய‌கியாக ‌திக‌ழ்‌ந்தன‌ர் நடிகை ர‌ம்பா. இ‌வ‌ர் ‘த்ரீ ரோசஸ்’ என்ற படத்தை தயாரித்தார். அ‌ந்த பட‌‌த்‌தி‌ல் அவரு‌க்கு ந‌ஷ்ட‌ம் ஏ‌ற்ப‌ட்டது.

மீண்டும் தமிழ் பட உலகிற்கு திரும்பிய ரம்பா, ‘விடியும் வரை காத்திரு’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். மேலும் கலைஞர் தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல் ‘மானாட மயிலாட’ என்ற நிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ரம்பா நேற்று கவலைக்கிடமான நிலையில் வடபழனியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனும‌‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர். அவர் தீவிர சிகிச்சைக்கு பின் அபாய கட்டத்தை தாண்டினார். அவர் சாப்பிட்ட உணவில் விஷதன்மை இருந்ததால், வயிற்று கோளாறு ஏற்பட்டு அவர் மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு சிகிச்சை பெற்றதாக அவரது உறவினர்களும்,மருத்துவமனை வட்டாரமும் தெரிவித்தன.

ஆனா‌ல் நடிகை ர‌ம்பா ‌விஷ‌ம் குடி‌த்து த‌ற்கொலை‌க்கு முய‌ன்றதாக ‌சி‌னிமா வ‌ட்டார‌ங்க‌ளி‌ல் செ‌ய்‌தி பர‌வியது.

இத‌னிடையே மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்கும் சக நடுவர்களான டான்ஸ் மாஸ்டர் கலா, நடிகை குஷ்பு மற்றும் நடனம் ஆடுபவர்கள் என பலர் ரம்பாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

No comments: