Search

Custom Search

Monday, March 31, 2008

ஹாரிபாட்டர் கடைசி புத்தகம் 2 படங்களாக தயாராகிறது


இங்கிலாந்து பெண் எழுத்தாளர் ஜே.கே.ரோலிங் எழுதிய ஹாரிபாட்டர் நாவலின் கடைசி புத்தகத்தை, இரண்டு திரைப்படங்களாக எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலகமெங்கும் பல மொழிகளில் வெளியான ஹாரிபாட்டர் திரைப்படம் அனைத்து தரப்பினரின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றதுடன் வசூலிலும் பல புதிய சாதனைகளை படைத்தது.
இந்தக் கதையை எழுதியதன் மூலம் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த ரோலிங், இதன் கடைசி அத்தியாயத்தை (7வது புத்தகத்தை) கடந்த சில மாதங்களுக்கு முன் எழுதி முடித்தார்.
இந்த அத்தியாயத்துடன் ஹாரிபாட்டர் படத்தொடர் நிறைவடைய உள்ளதால், இதனை 2 பாகங்களாக தயாரிக்க வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, ஹாரிபாட்டர் அண்டு தி டெட்லி ஹாலோஸ்-முதல் பாகம் (Harry Potter and the Deathly Hallows: Part -1) 2010 நவம்பரிலும், இரண்டாம் பாகம் 2011 மே மாதமும் வெளியாகும் என தயாரிப்பாளர் டேவிட் தெரிவித்துள்ளார்.
ஹாரிபாட்டரின் 6வது புத்தகமான தி ஹால்ஃப்-பிளட் பிரின்ஸ் (The Half-Blood Prince), வரும் நவம்பரில் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் தீப ஓட்டம்: எவரெஸ்டில் ஏறத் தடை



எவரெஸ்ட் சிகரத்தில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் செல்ல சீன அரசு முடிவு செய்துள்ளதைத் தொடர்ந்து, மலையேற்ற வீரர்கள் எவரெஸ்டில் ஏற மே 10ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடை கடந்த 10ம் தேதி முதல் அமலாகியுள்ளது.
திபெத் தன்னாட்சி பகுதி மலையேற்ற கூட்டமைப்பின் சார்பில் 10ம் தேதி இணையத்தில் வெளியிடப்பட்ட குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையேற்றத்தால் எவரெஸ்ட் சிகரத்திற்கு செல்லும் வழிப்பாதைகளில் அதிக நெரிசல் ஏற்படும் என்றும், இதனால் ஒலிம்பிக் ஜோதியை சிகரத்திற்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படும் என்பதால் மலையேற்றத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 1950ம் ஆண்டு திபெத் பகுதியை சீனப்படைகள் ஆக்கிரமித்ததை தொடர்ந்து, எவரெஸ்ட் சிகரமும் சீனாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

த‌மிழக ப‌ள்‌ளிக‌ளி‌ல் யோகா க‌ட்டாய‌ம்

த‌மிழக‌த்‌தி‌ல் உ‌ள்ள அனை‌த்து‌ப் ப‌‌ள்‌ளிக‌ளிலு‌ம் வரு‌ம் க‌ல்‌வியா‌ண்டு முத‌ல் யோகா க‌ட்டாய‌ப் பாடமா‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று ‌த‌மிழக அரசு ‌தி‌ங்க‌ள் ‌கிழமை அ‌றி‌வி‌த்து‌‌ள்ளது.
ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் கா‌ங்‌கிர‌ஸ் உறு‌ப்‌பின‌ர் எ‌ஸ். சே‌க‌ர் கே‌‌ட்ட கே‌ள்‌வி‌க்கு பத‌ி‌ல் ‌அ‌‌ளி‌த்த த‌மிழக ப‌ள்‌ளி‌க் க‌ல்‌வி‌த்துறை அமை‌ச்ச‌ர் த‌‌ங்க‌ம் தெ‌ன்னரசு, முத‌ல்வ‌ரி‌ன் உத்தரவுப்படி பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க ஆசிரியர்களுக்கு யோகா கற்றுக் கொடுக்கப்படுகிறது என்றார்.
300 யோகா ப‌யி‌ற்றுன‌ர்க‌ள் உத‌வியுட‌ன், த‌மிழக‌த்‌தி‌ல் உ‌‌ள்ள த‌னியா‌ர், அரசு ப‌ள்‌ளிக‌ளி‌ல் ப‌ணி பு‌ரியு‌ம் 1.10ல‌ட்ச‌ம் ஆ‌‌சி‌ரிய‌ர்க‌ளு‌க்கு இத‌ற்கான ப‌யி‌ற்‌சி அ‌‌ளி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்று அவ‌ர் கூ‌றினா‌ர்.
இதற்காக ரூ.1 கோடியே 61 லட்சம் செலவிடப்பட்டுள்ளது எ‌ன்று‌ம் இந்த ஆண்டும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது எ‌ன்று‌‌ம் அமை‌ச்ச‌ர் த‌‌ங்க‌ம் தெ‌ன்னரசு தெரிவித்தார்.
வரும் கல்வி ஆண்டில் யோகா பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் யோகாவுக்கு தனி பாடவேளை ஒதுக்கப்பட்டு, அதில் யோகா கற்பிக்கப்படும் எ‌ன்று‌ம் இந்த கல்வி ஆண்டிலேயே இது செயல் படுத்தப்படும் எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.
த‌மிழக முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி ‌தினமு‌ம் யோகா ப‌யி‌ற்‌சியை மே‌ற்கொ‌ள்வதாகவு‌ம், இதுதா‌ன் அவரது உட‌ல் நல‌த்‌தி‌ன் ரக‌சிய‌ம் எ‌ன்று‌ம் அ‌ப்போது அவ‌ர் தெரிவித்தார்.

2010ல் ஆங்கிலத்திற்கு மாற்றாக 'பங்லிஷ்'

வரும் 2010ம் ஆண்டில், ஆங்கிலத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு சர்வதேச மொழி என்ற பெருமையை புதிய மொழியாக கருதப்படும் 'பங்லிஷ்' பெற்று விடும் என மொழியியலாளர்கள் கணித்துள்ளனர்.
தற்போது இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட மக்கள் ஆங்கிலத்தை தங்கள் தாய்மொழியாக (முதன்மை மொழி) கொண்டுள்ளனர். இதன்படி வரும் 2010-ம் ஆண்டில் ஆங்கிலம் பேசும் இவர்களைப் போன்றவர்களின் மக்கள் தொகை 350 மில்லியனாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பிற மொழியை தாய்மொழியாக கொண்டுள்ள மக்கள் பேசும் ஆங்கிலம், உண்மையான ஆங்கில உச்சரிப்பில் இருந்து மாறுபட்டுள்ளது.
உதாரணமாக சிங்கப்பூரில், ஆங்கிலத்தை 2ம் மொழியாக கொண்டவர்கள் பேசும் ஆங்கிலத்தில் மலாய், தமிழ், சீன மொழியின் கலப்பு உள்ளது. இதனை ஆங்கிலத்தை முதல் மொழியாக கொண்டவர்கள் புரிந்து கொள்வது கடினம்.
இதன் காரணமாக இவர்கள் பேசும் மொழிக்கு பங்லிஷ் (Panglish) அல்லது குளோபல் இங்லிஷ் (global English) என்று மொழியியலாளர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.
உலகளவில் வரும் 2010ம் ஆண்டுக்குள் 'பங்லிஷ்' பேசுபவர்களின் எண்ணிக்கை 2 பில்லியனை தாண்டும் என்பதால், அப்போது இது சர்வதேச மொழி என்ற அந்தஸ்தை பெற்றுவிடும் என்றும் மொழியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குடிபோதை வாகனம்: கிப்ஸ் கைதாகி விடுதலை ஹெர்ஷல் கிப்ஸ்

ஹெர்ஷல் கிப்ஸ்
தென் ஆப்பிரிக்க தலைநகர் கேப்டவுனில் மது அருந்தி விட்டு, குடிபோதையில் வண்டி ஓட்டியதாக தென் ஆப்பிரிக்க துவக்க ஆட்டக்காரர் ஹெர்ஷல் கிப்ஸ் நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
ஆனால் அவர் உடனடியாக 67.53 டாலர்கள் தொகை செலுத்தி ஜாமீனில் விடு‌வி‌க்க‌ப்பட்டார். என்றாலும் கிப்ஸ், வரும் ஜூன் 27-ம் தேதி கேப்டவுன் நீதிபதிகள் முன்னால் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கேப்டவுன் நகரின் கடற்கரைப் பகுதியில் வெள்ளியன்று நள்ளிரவு 3.45 மணியளவில் கிப்ஸ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக அவர் சரியாக விளையாடதால் தென் ஆப்பிரிக்க் அணியின் நடப்பு இந்திய தொடருக்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் ஏப்ரல் 18-ம் தேதி துவங்கும் ஐ.பி.எல். இருபதுக்கு 20 போட்டிகளில் ஹைதராபாத் அணிக்கு கிப்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விலைவாசி உயர்வு: திங்களன்று அமைச்சரவை கூட்டம்

பிரதமர் மன்மோகன் சிங்
அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்க, பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை திங்களன்று கூட உள்ளதாக நிதித்துறைச் செயலர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 15ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் பணவீக்க விகிதம் 6.68 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 13 மாதங்களை கணக்கில் கொண்டால் இதுவே மிக உயர்ந்த பணவீக்க அளவாகும்.
எனவே நாளை கூடும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 60 அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
மேலும், புதனன்று, உயர்நிலை குழு கூட்டமும் நடைபெற உள்ளதாகவும், இக்கூட்டத்தில் அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படும் என்றும் வர்த்தகத்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என இடதுசாரிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இப்பிரச்சனை தொடர்பாக விவாதிக்க மத்திய அமைச்சரவை திங்களன்று கூடுவது குறிப்பிடத்தக்கது.