Search

Custom Search

Monday, April 14, 2008

கான்பூரில் வெற்றி: தொடரை சமன் செய்தது இந்தியா

சவுரவ் கங்குலி
தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் நடந்த 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற போட்டிக்கணக்கில் இந்தியா சமன் செய்துள்ளது.
கடந்த 11ம் தேதி துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா, முதல் இன்னிங்சில் 265 ரன் சேர்த்தது. இந்திய தரப்பில் இஷாந்த் சர்மா, ஹர்பஜன்சிங் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
போட்டியின் 2ம் நாளான நேற்று முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணி, ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 288 ரன் சேர்த்திருந்தது. ஸ்ரீசாந்த் 9 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இன்றைய 3ம் நாள் ஆட்டத்தில், இந்தியா 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென்ஆப்பிரிக்க பந்து வீச்சை விளாசிய, இஷாந்த் சர்மா-ஸ்ரீசாந்த் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 46 ரன் சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 60 ரன் முன்னிலை பெற்றது.
அடுத்து களமிறங்கிய தென்ஆப்ரிக்கா, தனது 2வது இன்னிங்சில் 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் ஸ்மித் அதிகபட்சமாக 35 ரன், பிரின்ஸ் ஆட்டமிழக்காமல் 22 ரன் சேர்த்தனர்.
இந்திய தரப்பில் ஹர்பஜன்சிங் 4 விக்கெட், வீரேந்தர் சேவாக் 3 விக்கெட், இஷாந்த் சர்மா 2 விக்கெட் வீழ்த்தினர்.
ஹர்பஜன் சிங்
வெற்றி பெற 62 ரன் மட்டுமே தேவை என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சேவாக் 22 ரன்னிலும், ஜாபர் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து விளையாடிய கங்குலி-டிராவிட் ஜோடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தது.
இன்னிங்சின் 13வது ஓவரில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன் எடுத்தது. கங்குலி 13 ரன், டிராவிட் 18 ரன் எடுத்தனர்.
முதல் இன்னிங்சில் 87 ரன் குவித்த கங்குலி ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த டெஸ்ட் தொடரில் மொத்தம் 19 விக்கெட்களை கைப்பற்றிய ஹர்பஜன்சிங் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை, இந்தியா 1-1 என்ற போட்டிக்கணக்கில் சமன் செய்துள்ளது. மகேந்திர சிங் தோனி கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அஜ்மலை பாராட்டிய கமல்

அஞ்சாதே' புகழ் அஜ்மல் வானத்திற்கும் பூமிக்கும் குதியாய் குதிக்கிறார். சந்தோஷத்தில் மனிதருக்கு தலை- கால் புரியவில்லை.
வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் கிடைப்பது என்பது சும்மாவா? ஆமாம்! அண்மையில் திரையுலம் நடத்திய உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டிருக்கிறார் அஜ்மல். மேடையில் அவரை அடையாளம் கண்டு கொண்ட கமல், அஞ்சாதே படத்தில் அஜ்மலின் நடிப்பை ஏகத்திற்கு புகழ்ந்து தள்ளியுள்ளார்.
ஏற்கனவே கமல் ரசிகரான அஜ்மல், அவரை பார்ப்பதே பெருமையாக கருதி வந்த நிலையில், கமல் வாயால் பாராட்டையும் பெற்றுவிட்டார் என்றால் எப்படி இருந்திருப்பார் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

விளம்பரப் பலகைகள் 15 நாளில் அகற்றப்படும்

சென்னை நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகள் அனைத்தையும் அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதுபோன்ற விளம்பரப் பலைகளை அனைத்தும் அடுத்த 15 நாட்களில் அகற்றப்பட்டு விடும் என்று சென்னை மாநகர ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
இதுவரை சுமார் 15 ஆயிரம் விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், கேஸ் வெல்டிங் எந்திரங்களைக் கொண்டு இரவு நேரங்களில், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அவை அகற்றப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சென்னை நகரின் அழகைக் கெடுக்கும் வகையில் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அகற்ற வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மாநில அரசின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

புல்லட் ரயில் குறித்து பரிசீலனை- ஆர். வேலு

நாட்டில் புல்லட் ரயில்களை அறிமுகம் செயவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், இதுகுறித்த ஆய்வறிக்கை எதிர்பார்க்கப்படுவதாகவும் மத்திய ரயில்வே இணையமைச்சர் ஆர். வேலு கூறியிருக்கிறார்.
வேலு}ரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், புல்லட் ரயில்களை இயக்கினால் சுற்றுச்சூழல் பாதிப்பு இருக்காது என்பதோடு பயண நேரமும் குறையும் என்று கூறினார்.
அங்கோலா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு டீசல் எஞ்சின், நீராவி எஞ்ஜின் உள்ளிட்ட ரயில் என்ஜின்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
காட்பாடி வழியாக தற்போது நெல்லைக்கு வாரம் ஒருமுறை இய்ககப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.