Search

Custom Search

Sunday, April 20, 2008

தற்கொலையை ஆதரிக்கும் இணையதளங்கள்

தொழில்நுட்பமும், விஞ்ஞானமும் எத்தனை வளர்ச்சி கண்டாலும், மனிதனின் மறாத சில உணர்வுகளுக்கு வடிகால் இல்லை என்பதே எதார்த்தம்.
ஆம்! தற்கொலை எண்ணங்களை விமர்சனம் செய்து அந்த எண்ணங்களை மறையச் செய்யும் இணைய தளங்களை விட தற்கொலையை ஆதரித்து தூண்டும் இணைய தளங்களே அதிகம் புழக்கத்தில் இருப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
பிரிட்டனின் பிரிஸ்டல், ஆக்ஸ்ஃபோர்ட், மற்றும் மான்செஸ்டர் பல்கலைக்கழகங்களின் ஆய்வாளர்கள் இந்த கொடூரமான துன்பத்தை ஆய்வறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.
தற்கொலை செய்து கொள்வது எப்படி? அதாவது "ஹவ் டு கமிட் சூசைட்" என்று எந்த இணைய தேடல் எந்திரத்தில் நீங்கள் போட்டுத் தேடினாலும் தற்கொலையை ஆதரிக்கும் இணைய தளங்களே அதிகம் நமக்கு காணக் கிடைக்கிறது என்று இந்த ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
தற்கொலை நடத்தைகளைத் தூண்டுவதில் சில இணைய தளங்களின் பங்கு குறித்து சமீப காலங்களாக அறிக்கைகள் வந்த வண்ணம் இருந்தாலும், இந்த இணைய தளங்களை எவ்வாறு சுலபமாக ஒருவரால் அணுக முடிகிறது என்பது இதுவரை சரியாக ஆவணப்படுத்த முடியவில்லை என்பதே நிதர்சனம்.
இந்த இணையதளங்களில் எம்மாதிரியான தகவல்கள் காணக் கிடைக்கின்றன என்பதும் இன்னமும் பூடக்மாகவே உள்ளது.
தற்கொலை பற்றிய ஒரு சாதரண தகவல் குறித்த சாதாரண தேடல் எந்திர நடவடிக்கை மூலம் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டபோது மொத்தம் 240 இணைய தளங்கள் காணக்கிடைத்துள்ளன. இதில் பாதிக்கும் மேற்பட்டவைகளில் தற்கொலை செய்து கொள்ளும் முறைகள் விளக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஒவ்வொரு 5 இணைய தளங்களிலும் ஓரிரு இணைய தளங்கள் தற்கொலை இணைய தளங்களாகவே இயங்கி வருகின்றன என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கும்மேல் தற்கொலைகளை தூண்டுபவையாகவும், தற்கொலை செய்து கொள்வது பற்றியும் விளக்கியுள்ளன என்று கண்டுபிடித்துள்ளது இந்த ஆய்வு.
12 சதவீத இணையதளங்களே தற்கொலையை கடுமையாக எதிர்த்து எழுதியுள்ளன.
இந்தியாவில் தற்போது 4.2 கோடி பேர் இணைய தளங்களை தீவிரமாக பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 1.2 லட்சம் பேர் இந்தியாவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். 4 லட்சம் பேர் தற்கொலை முயற்சி செய்கின்றனர் என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இதில் எத்தனை தற்கொலைகளையும், எத்தனை தற்கொலை முயற்சிகளையும் இது போன்ற இணையதளங்கள் தூண்டுகின்றன என்பது ஆய்வுக்குரிய விஷயமே.
மனிதனின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் தகவல் தொழில் நுட்பம் தனது பங்கினை திறம்பட செலுத்தி வருகிறது. ஆனால் தற்கொலையிலும் அது ஆட்சி செலுத்துகிறது என்பது… "சாரி! ரொம்ப டூ மச்!"

மானிட்டர் இடம் எவ்வாறு இருந்தால் சரி?

நம்மில் பலர் தற்போது கணினிகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. ஆனால் அதனை முறையான வழியில் செய்கிறோமா என்று பார்த்தால் வெகுசிலரே தங்கள் கண்கள், கழுத்து உள்ளிட்ட உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்தைக் கவனத்தில் கொண்டு செய்கின்றனர் எனலாம்.
கணினித் திரையை (மானிட்டர்) சரியான இடத்தில் நீங்கள் வைக்கவில்லையென்றால் கழுத்து வலி, கண் உபாதைகள் தோன்றுகின்றன.
முதலில் கணினித் திரையை உங்களுக்கு நேராக வைத்திருக்க வேண்டும். அது சற்றே வலது புறமாகவோ, இடதுபுறமாக்வோ இருந்தால் உங்களுக்கு நாளடைவில் கழுத்து வலி ஏற்படும். தோள் பட்டைகளிலும் வலி ஏற்படலாம்.
முடிந்த அளவு பார்வைக்கு தெரியும் தூரத்திலாவது கணினித் திரையை அமைத்துக் கொள்ள வேண்டும். பெரிய திரை கிடைத்த பாக்கியவான்கள் இன்னமும் நன்றாக பின்னால் உட்கார்ந்து பணியாற்றலாம். குறைந்தது கைக்கெட்டும் தூரத்தை விடவும் சற்றே தள்ளி அமர்ந்து இயங்குவதுதான் கண்களுக்கு அயற்சியை உருவாக்காது.
மானிட்டரைக் காட்டிலும் நீங்கள் ஒரு 2 அல்லது 3 இன்ச் உயரத்தில் இருந்து இயங்கினால் கண்கள் பாதிப்புக்குள்ளாகாது. கணினித் திரை ரொம்பவும் தாழ்வாக இருந்தால் கழுத்தை நீட்டி நீங்கள் பார்க்க வேண்டி வரும். இதுதான் கழுத்து வலியின் ஆரம்பம். சரி அதிக உயரத்திலிருந்தால் உங்கள் கழுத்தை பின்னால் சாய்த்து பார்க்க வேன்டும், இதனால் ஏற்படுவது கழுத்து மற்றும் தோள்பட்டை வலிகள். மேலும் இதனால் தலைவலியும் அதிகமாக வரலாம்.
கணினித் திரையை சற்றே மேலே உயர்த்தவும். இதனால் அடிப்பகுதி உங்களுக்கு அருகில் இருக்கும். இதன் மூலம் கழுத்தை அசைக்காமல் முழுத் திரையும் உங்களுக்கு தெரிய வரும். கணினித் திரையை கிழாக சாய்ப்பது ஒரு போதும் கூடாது.
கணினித் திரையில் நாம் செய்யும் இந்த அட்ஜஸ்மென்ட்கள் முக்கியமானது ஏனெனில் அலுவலகத்தில் உள்ள விளக்குகளின் வெளிச்சங்களின் தன்மையாலும் திரையை தொடர்ந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதாலும் கண்களில் உள்ள நீர் வற்றி விட வாய்ப்பு உள்ளது. இதனால் குழம்பிய ஒரு பார்வை ஏற்படலாம்.
அதேபோல் உங்கள் திரைகளில் வேறு ஒரு பிம்பத்தின் பிரதிபலிப்பு தெரிவதும் கூடாது. ஏனெனில் நாம் உடனே ஒரு கண்ணால் பார்க்கத் துவங்குவோம். எனவே அறை வெளிச்சம் சரியானதாக இருக்க வேண்டும்.
சமச்சீரற்ற வெளிச்சத்தில் நாம் கணினித் திரையை பார்த்தோமானால் தலைவலியும், பார்வைக் கோளாறுகளும் ஏற்படும்.
அதேபோல் இயற்கை வெளிச்சத்தில் பணியாற்ற நேர்ந்தால் கணினித் திரையின் வெளிச்சத்தை நாள் முழுதும் மாற்றிக் கொண்டேயிருக்க வேண்டும்.
எல்லாவற்றையும் விட முக்கியமானதும் அடிப்படையானதும் கணினித் திரையை நன்றாக சுத்தம் செய்யவேண்டும். அதில் உள்ள அழுக்குகளால் நம் பார்வை பழுதடைவதுதான் மிச்சமே தவிர வேறு எந்த உபயோகமும் இல்லை.
மானிட்டர் மட்டுமல்ல கணினி குறித்த எந்த செயல்பாடாயிருந்தாலும் அதற்கான வழி முறைகளை கடைபிடித்தால் நீண்ட நாளைய பயன்பாட்டினால் ஏற்படும் வியாதிகளைத் தவிர்க்கலாம்.
அதேபோல் ஒவ்வொரு 20 நிமிட வேலைக்குப் பின்னும் ஒரு 20 அல்லது 30 வினாடிகள் கணினியைத் தவிர்த்து வெளியில் நீண்ட தொலைவுகளில் பார்வையை செலுத்தி விட்டு வருவது நல்லது.
இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிப்போம். கணினி பயன்படுத்துவதால் ஏற்படும் வியாதிகளைத் தவிர்ப்போம்.

மோட்டரோலா நவீன செல்போன் அறிமுகம்

அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கிய புதிய செல்போனை மோட்டரோலா நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்டீரியோ புளூடூத்-4 மற்றும் கிரிஸ்டல் டால்க் தொழில்நுட்பங்களை கொண்ட இந்த செல்போனுக்கு மோடோரோகர் யு-9 (MOTOROKR U9) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
25 மெகாபைட் நினைவகத் திறன் கொண்ட இந்த புதிய போனில், மைக்ரோசாப்ட் விண்டோஸ் மீடியா பிளேயர் 11 மென்பொருளையும் இயக்கும் வசதியும் உள்ளது சிறப்பம்சமாக கருதப்படுகிறது.
மேலும் 4 மெகாபைட் நினைவகத் திறனுடைய மெமரி கார்டையும் இந்த போனில் பயன்படுத்த முடிவதால் ஏராளமான புகைப்படங்கள், பாடல்களை பதிவு செய்ய முடியும் என மோட்டரோலா தெரிவித்துள்ளது.