Search

Custom Search

Wednesday, August 20, 2008

அடுத்த என் இலக்கு இந்திப் பட உலகம்!

தாணு தயாரிப்பில் வளர்ந்துவரும் பிரமாண்டமான படம் 'கந்தசாமி'. இயக்குனர் சுசிகணேசன் இயக்க விக்ரம் நடிக்கிறார். பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

இதையடுத்து இந்திப் பட உலகில் இறங்க இருக்கிறார் விக்ரம். மணிரத்னம் இயக்கும் இந்திப் படத்தில் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்கவுள்ளனர். அந்தப் படத்தில்தான் விக்ரம் முக்கியமான அதாவது அபிஷேக் பச்சனுக்கு இணையான கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

அதே படத்தை தமிழிலும் இயக்கவிருக்கிறார் மணிரத்னம். அதில் ஹீரோவாக, ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்கிறார். தமிழில் ஹீரோவாக நடித்துவிட்டு, இந்தியில் முதன் முதலில் நடிக்கும் படத்தில் ஹீரோயில்லாமல் வேறு கேரக்டரில் நடிப்பது பற்றி கொஞ்சம் கூட தனக்கு கவலை இல்லை என்கிறார் விக்ரம்.

மிகப்பெரிய இயக்குனர் மணிரத்னம், மிகப்பெரிய ஹீரோ அபிஷேக் பச்சன். அதேபோல உலக அழகியும், அமிதாப் பச்சனின் மருமகள். இப்படி மூன்று சிறப்புகளும் கொண்டுள்ள படத்தில் நடிப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது என்கிறார். 'கந்தசாமி' கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது. நினைத்தபடி படத்தை எடுத்து வருகிறார் இயக்குனர்.

அதேபோல, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை படம் நன்றாக வரவேண்டுமென்று அதிக பட்ஜெட் செலவு செய்து தயாரித்து வரு‌கிறார் தாணு. அத்தோடு... அடுத்த மாதம் தன் மகன் இயக்கும் சக்கரக்கட்டி படமும், அதற்கடுத்து தீபாவளிக்கு கந்தசாமியும் ரிலீஸாக உள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளார்.

சிறந்த தொழில்நுட்பம் அறிமுகம்!

சென்னையில் உள்ள சத்யம் மல்டிஃபிளக்ஸ் தியேட்டர் பல்வேறு சிறப்புகளைப் பெற்றது. எப்படிப்பட்ட படங்களையும் அங்கே பார்த்தால் அதன் தரம் தனியாக உள்ளது.

மும்பை, ஐதராபாத் தியேட்டர்களுக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ள இத்திரையரங்கில் தற்போது 3டி எனும் தொழில்நுட்பத்துடன் படங்களைத் திரையிட இருக்கிறார்கள். இதற்காக தென்கொரியாவின் மாஸ்டர் இமேஜ், இன்சைட் மீடியா நிறுவனங்களுடன் இணைந்து இந்த ஆர்.டி.எக்ஸ்.-3டி படங்களைக் கொண்டு வருகின்றனர்.

இதற்கு மு‌ன்னால் வந்த 3டி படங்களுக்காக தனியாக கிராஃபிக்ஸ் செ‌ய்து அதை மட்டும் கண்ணாடி வழியாக தெரியும்படி காட்டினார்கள். ஆனால், தற்போது மொத்தப் படத்தையும் 3டி எ·பெக்டில் துல்லியமான ஒலியுடன் தெரியும்படி தொழில்நுட்பத்தை கொண்டு வருகிறார்கள். இதனால் ஒவ்வொரு காட்சியும் நம் கண் முன்னால் நடப்பது போல தத்ரூபமாக தெரியும்.

படம் பார்க்கிறோம் என்பது இல்லாமல் நேரில் நடப்பது போன்ற உணர்வு ஏற்படும் என்கிறார் சத்யம் சினிமாஸ் தலைமை செயல் அதிகாரி.