Search

Custom Search

Saturday, August 30, 2008

அதிகாரமிக்க பெண்கள் பட்டியலில் இந்திரா நூயி, சோனியா!

உலகளவில் அதிகாரமிக்க பெண்கள் பட்டியலை அமெரிக்காவின் பிரபல இதழான போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மார்கெல் தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

அவருக்கு அடுத்தபடியாக அமெரிக்க பெடரல் காப்பீட்டு வைப்பு நிதியத்தின் தலைவரான ஷீலா பெய்ர் 2வது இடத்தில் உள்ளார். அமெரிக்க பொருளாதாரம் கடந்த சில மாதங்களாக நலிவடைந்து வருவதைத் தொடர்ந்து இவருக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

இந்திய வம்சாவ‌ழியைச் சேர்ந்தவரும், பிரபல பன்னாட்டு நிறுவனமான பெப்ஸியின் தலைவருமான இந்திரா நூயி 3வது இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்காவின் வெல் பாயின்ட் நிறுவன தலைவர் ஏஞ்சலா பிராலி, இங்கிலாந்தின் ஆங்லோ அமெரிக்கன் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி சிந்தியா கரோல், அமெரிக்காவின் கிராஃப் புட்ஸ் தலைவர் ஐரின் ரோஸன்பெல்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கடந்தாண்டு வெளியான பட்டியலில் 3ஆம் இடம் பிடித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சரான காண்டலீஸா ரைஸ், தற்போது 7வது இடத்திற்கு பின்தங்கினார். புஷ் அரசின் ஆட்சிக் காலம் வரும் நவம்பரில் முடிவடைய உள்ளதால் காண்டலீஸாவின் மதிப்பு சற்று குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சோனியாவுக்கு 21வது இடம்: காங்கிரஸ் தலைவரான சோனியா காந்திக்கு 2008ஆம் ஆண்டு பட்டியலில் 21வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவின் மாபெரும் தேசிய கட்சியான காங்கிரசுக்கு கடந்த 10 ஆண்டுகளாக தலைவராக பதவி வகித்து வரும் சோனியா, நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக உருவெடு‌த்து வருவதாக போர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.

சோனியாவுக்கு நிகரான பெண்மணியாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ‌விள‌ங்‌கி வருவதாகவும், காங்கிரஸின் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை எதிர்ப்பதற்காக மாயாவதி, பா.ஜ.க.வுடன் ஒன்றிணைந்து செயல்படுவதும் அவருக்கு கூடுதல் பலத்தை அளி‌ப்பதாக கூறப்பட்டுள்ளது.

நா‌ட்டி‌ன் முத‌ல் இணைய தள டி.‌வி. ராஜ‌ஸ்தா‌னி‌ல் அ‌றிமுக‌ம்!

நமது நா‌ட்டி‌ன் முத‌ல் ஐ.‌பி.டி.‌வி. (இணைய தள டி.‌வி.) ‌ரா‌ஜ‌ஸ்தா‌ன் மா‌நில‌த்தை‌ச் சே‌ர்‌ந்த கிராம‌ப் புற‌த்‌தி‌ல் அ‌‌றிமுக‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ஆகா‌ஷ் க‌ண்ணாடி இழை கே‌பி‌ள் ‌நிறுவனமு‌ம், ‌பி.எ‌ஸ்.எ‌ன்.எ‌ல் ‌நிறுவனமு‌ம் இணை‌ந்து த‌ங்களது ஐ.‌பி.டி.‌வி. சேவையை ராஜ‌ஸ்தா‌‌ன் தலைநக‌ர் ஜெ‌ய்‌ப்பூ‌ர் அரு‌கி‌ல் உ‌ள்ள கு‌ல்கா‌ஸ் எ‌ன்ற ‌கிராம‌த்‌தி‌ல் அ‌றிமுக‌ம் செ‌ய்து‌ள்ளன.

‌சில வார‌ங்க‌ளு‌க்கு மு‌ன்பு ஜெ‌ய்‌ப்பூ‌ரி‌ல் ம‌ட்டு‌ம் த‌ங்களது ஐ.‌பி.டி.‌வி. சேவையை‌த் துவ‌ங்குவதாக அ‌றி‌வி‌த்‌திரு‌ந்த இ‌ந்த இர‌ண்டு ‌நிறுவன‌ங்களு‌ம், த‌ற்போது ராஜ‌ஸ்தா‌னி‌ன் மு‌க்‌கிய நகர‌ங்க‌ள் அனை‌த்‌தி‌ற்கு‌ம் அ‌ந்த‌ச் சேவையை ‌வி‌ரிவுபடு‌த்த‌த் ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளன.

இ‌ந்த‌ச் சேவையை‌ப் பெறு‌ம் ம‌க்க‌ள், ‌பி.எ‌ஸ்.எ‌ன்.எ‌ல். ‌நிறுவன‌த்‌தி‌ன் அக‌ண்ட அலைவ‌ரிசை (‌பிரா‌ட் பே‌ண்‌ட்) இணை‌ப்பு மூலமாக‌த் தா‌ங்க‌ள் ‌விரு‌ம்பு‌ம் 120 சேன‌ல்களையு‌ம், ‌திரை‌ப்பட‌த் தொகு‌ப்பையு‌ம் பா‌ர்‌க்க முடியு‌ம்.

ரூபாயின் பணவீக்கம் 12.40% ஆக குறைந்தது!

காய்கறிகள், இறைச்சி, சிமெண்ட் ஆகியவற்றின் விலைகள் குறைந்ததால், தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்த ரூபாயின் பணவீக்கம் ஆகஸ்ட் 16ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 12.40 விழுக்காடாக குறைந்துள்ளது.

இது பணவீக்கம் தொடர்ந்து குறையப் போவதற்கான ஆரம்ப அறிகுறி என்று கூறியுள்ள நிதி அமைச்சக அறிக்கை, அத்யாவசியப் பொருட்களின் பட்டியலில் உள்ள 98 பொருட்களில் 21 பொருட்களின் விலைகள் குறைந்துள்ளது, 48 பொருட்களின் விலைகளில் மாற்றமில்லை, மீதமுள்ள 29 பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளது.

கடந்த ஆண்டு இதே வாரத்தில் பணவீக்கம் 3.99 விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

காய்கறிகள் மட்டுமின்றி, முட்டை, மீன், எரிபொருள் ஆகியவற்றின் விலைகளும் 1 விழுக்காடு அளவிற்கு குறைந்துள்ளது.

பருப்பு வகைகள், பழங்கள், மசாலா பொருட்கள், எஃகு மற்றும் இரும்பு ஆகியவற்றின் விலைகள் உயர்ந்துள்ளது.