Search

Custom Search

Thursday, September 4, 2008

மி‌ன் வெ‌ட்டு ஏ‌ன்? த‌‌மிழக அரசு ‌விள‌க்க‌ம்!

த‌மிழக‌த்த‌ி‌ல் த‌ற்போது ‌மி‌ன் ‌நிலைமை ‌பி‌ன்னடை‌ந்து‌ள்ளதா‌ல், ‌நிலைமை ‌சீரடையு‌ம் வரை அரசுட‌ன் பொதும‌க்க‌ள் ஒ‌த்துழை‌க்குமாறு‌ம், ‌விவசாய‌த்‌தி‌ற்கு‌ம், தொ‌ழி‌ற்சாலைகளு‌க்கு‌ம் மாலை 6 ம‌ணி முத‌ல் 10 ம‌ணி வரை ‌மி‌ன்சார‌த்தை பய‌ன்படு‌த்துவதை த‌‌வி‌ர்‌க்குமாறு‌ம் த‌மிழக அரசு கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளது.

இது தொட‌ர்பாக த‌‌மிழக அரசு ப‌த்‌தி‌ரிகைக‌‌ள் மூல‌ம் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள ‌விள‌க்க‌‌ம் வருமாறு: த‌மிழக‌த்த‌ி‌ல் ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தியை அ‌திக‌ரி‌ப்பத‌ற்கு த‌‌‌மிழக அரசு மு‌க்‌கிய‌த்துவ‌ம் அ‌ளி‌த்து வரு‌கிறது. இ‌ந்த அரசு பொறு‌ப்பே‌ற்ற ‌பி‌ன் ‌மி‌ன்வா‌ரிய‌ம் மூலமாக மூ‌ன்று ‌நிலைய‌ங்களை ‌நிறுவுவத‌ற்கு ப‌ணி‌க‌ள் துவ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. இவை ஒ‌வ்வொ‌ன்று‌ம் 600 மெகாவா‌ட் ‌திற‌ன் கொ‌ண்டவையாகு‌ம்.

ம‌த்‌திய அர‌சி‌ன் கொ‌ள்கை‌‌யி‌ன் படி 4,000 மெகாவா‌ட் ‌திறனு‌ள்ள அ‌ல்‌ட்ரா மெகா பவ‌ர் ‌பிராஜ‌க்‌ட் ஒ‌ன்‌றினை செ‌ய்யூ‌ரி‌ல் ‌நிறுவுவத‌ற்கு த‌மிழக அரசு முடிவெடு‌த்து‌ள்ளது.

த‌மி‌ழ்நாடு ‌மி‌‌ன் வா‌ரிய‌த்த‌ி‌ன் க‌ட்டு‌ப்பா‌ட்டிலு‌ள்ள ‌மி‌ன் உ‌‌ற்ப‌த்த‌ி ‌நிலைய‌ங்க‌ள் ‌‌திறமையாக இய‌க்க‌ப்ப‌ட்டு வரு‌கி‌ன்றன. எ‌னினு‌ம் ‌பி‌ன்வரு‌ம் காரண‌‌ங்களா‌ல் ‌மி‌ன் ‌‌நிலைமை ‌திரு‌ப்‌திகரமாக இ‌ல்லை.

தெ‌ன்மே‌ற்கு பருவமழை போ‌திய அளவு இ‌ல்லாததா‌ல் த‌மிழக‌த்த‌ி‌ன் ‌நீ‌ர்‌த்தே‌க்க‌ங்‌க‌ளி‌ல் கட‌ந்த ஆ‌ண்டை ‌விட த‌ற்போது ‌நீ‌ரி‌ன் அளவு க‌ணிசமாக குறை‌ந்து‌ள்ளது. மேலு‌ம் இதர தெ‌ன் மா‌நில‌ங்க‌ளிலு‌ம் ‌மி‌ன் ‌நிலைமை ‌திரு‌ப்‌திகரமாக இ‌ல்லை எ‌ன்பதா‌ல் தெ‌ன்னக க‌ட்டமை‌ப்‌பி‌ன் செய‌ல்பாடு‌ம் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

‌நில‌க்க‌ரி ம‌ற்று‌ம் யுரே‌னிய‌ம் த‌ட்டு‌ப்பா‌ட்டா‌ல் நெ‌ய்வே‌லி ம‌ற்று‌ம் இதர ம‌த்‌திய ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தி ‌நிலை‌ய‌ங்க‌ளி‌லிரு‌ந்து பெற‌ப்படு‌ம் ‌மி‌ன்சார‌த்‌தி‌ன் அளவு 50 ‌விழு‌க்காடு குறை‌ந்து‌ள்ளது.

கட‌ந்த ‌சில‌ ‌தின‌ங்களாக கா‌ற்றாலைக‌ள் மூல‌ம் பெற‌ப்படு‌ம் ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தியு‌ம் 1,500 மெகாவா‌ட் குறை‌ந்து‌ள்ளது. ‌பிற மா‌நில‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து த‌‌மிழக அரசு போ‌‌திய ‌மி‌ன்சார‌த்தை வா‌‌ங்க மு‌ன்வ‌ந்த போ‌து‌ம் குறை‌ந்த அளவே வெ‌ளி‌ச்ச‌ந்தை‌யி‌ல் வா‌ங்க முடி‌கிறது. குறு‌கிய கால‌த்‌தி‌ல் ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தியை அ‌திக‌ரி‌ப்பத‌ற்கான அனை‌த்து முய‌ற்‌சிகளையு‌ம் அரசு மே‌ற்கொ‌ண்டு‌ள்ளது.

ம‌த்‌திய தொகு‌‌ப்‌பி‌லிரு‌ந்து த‌‌மிழக அரசு போ‌‌திய ‌மி‌ன்சார‌த்தை வா‌ங்க மு‌ன் வ‌ந்த போது‌ம் குறை‌ந்த அளவே வெ‌ளி‌ச்ச‌ந்தை‌யி‌ல் வா‌ங்க முடி‌கிறது. குறு‌கிய கால‌த்‌தி‌‌ல் ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தியை அ‌திக‌ரி‌ப்பத‌ற்கான அனை‌த்து முய‌ற்‌சிகளையு‌ம் அரசு மே‌ற்கொ‌ண்டு‌ள்ளது.

ம‌த்‌திய தொகு‌ப்‌பி‌லிரு‌ந்து கூடுதலாக ம‌ி‌ன்சார‌ம் பெறவு‌ம், ம‌‌த்‌திய ‌மி‌ன் ‌நிலைய‌‌ங்க‌ளி‌ன் உ‌ற்ப‌த்‌தியை அ‌திக‌ரி‌ப்பத‌ற்கு‌ம் த‌மிழக அரசு, ம‌த்‌திய அரசை கோ‌ரியு‌ள்ளது.

செ‌ன்ற மாத‌ம் ஏ‌ற்கனவே ‌மி‌ன் ‌‌வி‌நியோக‌த்‌தி‌ல் ‌சில க‌‌ட்டு‌ப்பாடுகளை அரசு அ‌றி‌வி‌த்தது. அவை முறையாக ஜூலை 21ஆ‌ம் தே‌தி முத‌ல் செய‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டன. ‌‌நிலைமை ‌சீரான போது ‌பல க‌ட்டு‌ப்பாடுக‌ள் தள‌ர்‌த்த‌ப்‌‌ப‌ட்டன.

ஆனா‌ல் த‌ற்போது ‌மி‌ன் ‌நிலைமை ‌பி‌ன்னடை‌ந்து‌ள்ளதா‌ல் ‌சில க‌ட்டு‌ப்பாடுகளை நடைமுறை‌ப்படு‌த்துவது த‌வி‌ர்‌க்க இயலாததா‌கி‌றது. அனை‌த்து பொது ம‌க்களு‌ம் ‌நிலைமை ‌சீரடையு‌ம் வரை அரசுட‌ன் ஒ‌த்துழை‌க்குமாறு கே‌ட்டு‌க் கொ‌ள்ள‌ப்படு‌கிறா‌ர்க‌ள்.

‌நிலைமை ‌‌சீரடை‌ந்த உட‌ன் இ‌க்க‌ட்டு‌ப்பாடுக‌ள் தள‌ர்‌த்த‌ப்படு‌ம். மாணவ‌ர்க‌ள் படி‌ப்பத‌ற்கு‌ம், ‌வீடுக‌ளி‌ல் மாலை நேர தேவை‌க்கு‌ம் ‌மி‌ன்சார‌ம் வழ‌ங்குவது அர‌சி‌ன் தலையாய நோ‌க்கமாகு‌ம். எனவே ‌விவசாய‌த்‌தி‌ற்கு‌ம், தொ‌ழி‌ற்சாலைகளு‌க்கு‌ம் மாலை 6 ம‌ணி முத‌ல் 10 ம‌ணி வரை ‌மி‌ன்சார‌த்தை பய‌ன்படு‌த்துவதை த‌‌வி‌ர்‌க்குமாறு கே‌ட்டு‌க் கொ‌ள்ள‌ப்படு‌கிறது.

இ‌ச்சமய‌த்த‌ி‌ல் ‌மி‌ன்னா‌க்‌கிகளை பய‌ன்படு‌த்து‌ம் தொ‌ழி‌ற்சாலைகளு‌க்கு உத‌வி செ‌ய்ய அரசு முடிவ‌ெ‌டுத்து‌ள்ளது. வ‌ர்‌த்தக மைய‌ங்க‌ளிலு‌ம், பொது ‌விழா‌க்க‌ளிலு‌ம் தேவைய‌ற்ற ஆட‌ம்பர ‌விள‌க்குகளை அமை‌க்க வே‌ண்டா‌ம் எ‌ன்று‌ம் பொது ம‌‌க்க‌ள் கே‌ட்டு‌க் கொ‌ள்ள‌ப்படு‌கிறா‌ர்க‌ள் என தெ‌ரி‌‌வி‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளது.

விமானப்படையின் மிக்-29 அரபிக்கடலில் விழுந்தது!

இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-29 ரக விமானம் ஜாம்நகர் கடற்கரைப் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அரபிக்கடலில் விழுந்தது. எனினும் அதன் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுதொடர்பாக புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய விமானப்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர், ஐஎன்எஸ் வல்சுரா (INS Valsura) படை தளத்தில் இருந்து பயிற்சியில் ஈடுபட்ட மிக்-29 (MiG-29) ரக விமானம் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்ததாகவும், எனினும் விமானி லெப்டினன்ட் தீர் (Lieutenant Dheer) உயிர் தப்பியதாகவும் கூறினார்.

இன்று மதியம் 12 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், ஜாம்நகரில் இருந்து 50 கி.மீ தொலையில் உள்ள கடல்பகுதியில் விமானம் விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.என்.எஸ் வல்சுரா கடற்படையினர் விமானத்தை தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஜனவரியில் மேற்குவங்கத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஹஸிமரா பகுதியில் மிக்-27 ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதைத் தொடர்ந்து குஜராத்தில் கடந்த பிப்ரவரி மாதம் மிக்-21 ரன விமானம் விபத்துக்குள்ளானது நினைவில் கொள்ளத்தக்கது.

நிலக்கரியை கொண்டு செல்ல வேகன் பற்றாக்குறை இல்லை: ரயில்வே!

அண்மையில் சில ஊடகங்களில், வேகன் பற்றாக்குறையால் நிலக்கரியை ஏற்றிச் செல்ல முடியவில்லை என்று வந்திருந்த செய்திகளை மறுத்துள்ள ரயில்வே அமைச்சகம், வேகன்கள் பற்றாக்குறை இல்லை என்று தெரிவித்துள்ளது.

இதுகு‌றி‌த்து ர‌யி‌ல்வே அமை‌ச்சக‌ம் ‌விடு‌த்து‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், "இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில், இந்திய நிலக்கரி நிறுவனமும், அதன் துணை நிறுவனங்களும் திட்டமிட்டதைவிட நாளன்றுக்கு 38 வேகன்கள் குறைவாக நிலக்கரியை எடுத்துச் சென்றுள்ளன.

இதனால் கிழக்கு மத்திய ரயில்வேயில் 20 காலி வேகன்களும், தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் 30 காலி வேகன்களும், கிழக்கு கடற்கரை ரயில்வேயில் 10 காலி வேகன்களும், நிலக்கரி ஏற்றிச் செல்வதற்காக ஒதுக்கப்பட்டு உபயோகப்படுத்தப்படாமல் இருந்தன" எ‌ன்று கூ‌றியு‌ள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும், இந்திய நிலக்கரி நிறுவனமும் அதன் துணை நிறுவனங்களும் நாள் ஒன்றுக்கு 195 வேகன் நிலக்கரியை எடுத்துச் செல்ல திட்டமிட்டிருந்தன. ஆனால் நாள் ஒன்றுக்கு 142 வேகன்கள் மட்டும் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த நிறுவனங்களிலிருந்து ரயில்வே கிடங்குக்கு நிலக்கரியை எடுத்துச் செல்ல முடியாததும் காரணமாக இருக்கலாம்" என்று‌ம் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.