Search

Custom Search

Wednesday, September 10, 2008

அக்.2-ஐ உலக மது‌ ஒ‌ழி‌ப்பு தினமாக கடைபிடிக்க வேண்டும்: அ‌ன்பும‌ணி வே‌ண்டுகோ‌ள்!

மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2ஆ‌ம் தேதியை உலக மது‌ ஒ‌‌‌ழி‌ப்பு தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் அன்புமணி வேண்டுகோள் விடுத்து‌ள்ளா‌ர்.

11 தென் கிழக்கு ஆசிய நாடுகளின் சுகாதார அமைச்சர்களும், பிரதிநிதிகளும் கலந்து கொள்ளும் இரண்டு முக்கியமான கூட்டங்கள் செ‌ப்ட‌ம்ப‌ர் 8ஆ‌ம் தே‌தி முத‌ல் 11ஆ‌ம் தேதி வரை நடைபெறு‌கிறது.

தென் கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) மண்டல ஆணைய கூட்டத்தை அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி புதுடெ‌‌ல்‌லி‌யி‌‌ல் துவக்கி வைத்தார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

தென் கிழக்கு ஆசிய மண்டலத்தில் சுகாதாரத் துறை எதிர்கொள்ளும் சவால்களையும், எதிர்காலத்திற்கான கொள்கை நெறியையும், இத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் இ‌ந்த கூ‌ட்ட‌‌த்‌தி‌ல் அமைச்சர்கள் கலந்தாய்வு செய்யவிருக்கின்றனர். மேலும் மனிதனின் உடல் நலத்தில் தட்ப வெப்ப மாற்றம் ஏற்படுத்தும் தாக்கத்தையும், ஆரம்ப சுகாதாரத்திற்கு புத்துயிர் ஊட்டுவது குறித்தும் ஆராய உள்ளனர்.

இ‌ந்த கூட்டத்தில் உரையாற்றிய ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் அன்புமணி, இந்தியாவில் தொற்று நோய் அல்லாத பிற நோய்களை கட்டுப்படுத்துவதில் அரசின் சுமை அதிகரித்து வருவதையும், புகையிலை மற்றும் மதுவின் தீய விளைவுகளிலிருந்து ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயத்தை காக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.

மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2ஆ‌ம் தேதியை உலக மது‌ ஒ‌ழி‌ப்பு தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று‌ அவர் வேண்டுகோள் விடுத்தார். நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ வசதியும், நியாயமான விலையில் மருந்துகளும் எளிதில் கிடைக்கச் செய்வதே இந்தியாவின் முக்கிய இலக்காகும் என்று அ‌‌ன்பும‌ணி கூ‌றினா‌ர்.

தமிழகத்தில் மின் தடை ‌‌நிறு‌த்த‌ம்!

சென்னை: காற்றாலை மின் உற்பத்தி பெருக்கத்தால் தமிழகம் முழுதும் நடைமுறைப்படுத்தப்பட்ட மின் தடை முடிவுக்கு வருகிறது.

ஞாயிறு முதலே சென்னை மற்றும் புற நகர்ப்பகுதிகளில் மின் தடை நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.

செவ்வாய் மாலைவாக்கில் 1,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. அந்த நாள் முழுதுமே காற்றாலை மின் உற்பத்தி 1,000 மெகாவாட் முதல் 1.500 மெகாவாட் வரை இருந்ததாக தமிழ் நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

ஞாயிறன்று காற்றாலை மின் உற்பத்தி 1,850 மெகாவாட்டாக இருந்தது என்று இந்திய காற்றாலை மின் சக்தி கூட்டமைப்பு துணைத் தலைவர் கஸ்தூரி ரங்கன் தெரிவித்தார்.

செவ்வாய் நண்பகல் 12.30 மணியிலிருந்து மின் தடை நிறுத்தப்பட்டது. காலை 6 மணி முதல் 12.30 மணி வரை 500 மெகாவாட் அளவிற்கு மி‌ன்தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முன்னேற்றங்களுக்கிடையிலும் கேரளாவிடமிருந்து தொடர்ந்து 100 மெகாவாட் மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. நெய்வேலியில் மின் உற்பத்தி மிகவும் மோசமாக உள்ளது அதிகாரிகளிடையே கவலை ஏற்படுத்தியுள்ளது. 340 மெகாவாட் மின்சாரம் மட்டுமே நெய்வேலியிலிருந்து கிடைத்து வருகிறது.

அரசும், மின்சார வாரியமும், அதிக மின் உற்பத்திக்காக நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனை வலியுறுத்தி வருகின்றன.

மின் தடை நேர‌த்தை உடனடியாக குறை‌க்க வே‌ண்டு‌ம்: த‌மிழக அரசு‌க்கு உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தரவு!

த‌மிழக‌த்‌தி‌ல் ‌மி‌ன் தடை நேர‌த்தை உடனடியாக குறை‌‌‌க்க த‌‌‌மிழக அரசு‌க்கு‌ம், ‌மி‌ன்வா‌ரிய‌த்து‌க்கு‌ம் செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

செ‌ன்னையை சே‌‌ர்‌ந்த வசிகரன் என்பவர் சென்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்‌ற‌த்த‌ி‌ல் தா‌க்க‌ல் செ‌‌ய்த பொது நலமனு‌வி‌ல், அரசின் கவனக்குறைவினால் த‌மிழக‌த்த‌ி‌ல் மின் வெட்டு ஏற்பட்டு உள்ளது. தினம் 8 மணி நேரம் ஏற்படும் மின்வெட்டினால் பொது மக்களுக்கு உண்டாகும் இழப்பை ஈடு செய்ய இயலாது.

அரசு ‌விழ‌ா‌க்க‌ள், அமை‌ச்ச‌ர்க‌ள் கல‌ந்து கொ‌ள்ளு‌ம் கூ‌ட்ட‌ங்க‌ள், அர‌சிய‌ல் க‌ட்‌சிக‌ள் நட‌த்து‌ம் பொது‌க் கூ‌ட்ட‌ங்க‌ள் ம‌ற்று‌ம் ‌‌மி‌ன்சார‌த்தை அ‌திகமாக பய‌ன்ப‌டு‌ம் ‌நிக‌ழ்‌ச்‌சி‌‌க்கு‌ தடை ‌வி‌தி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று மனு‌வி‌ல் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இந்த மனுவை விசாரித்த தலைமை ‌நீ‌திப‌தி கங்கூலி, ‌நீ‌திப‌தி இப்ராஹிம் கலிபுல்லா ஆகியோர், தமிழக மின்வாரியம் மற்றும் மின்துறை அமைச்சகத்தையும் இது குறித்து கால தாமதமின்றி நடவடிக்கை எடுக்குமாறு‌ம் முடிந்த அளவு மின்வெட்டை குறைந்து கொள்ள நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினர்.

மேலு‌ம் எல்லா அரசியல் கட்சிகளும் தங்களது அரசியல் பொது கூட்டங்களை குறைத்துக்கொள்ளவும் எ‌ன்று‌ம் அறிவுறுத்தின‌ர்.