Search

Custom Search

Wednesday, September 17, 2008

காற்றழுத்த தாழ்வு நிலை ‌தீ‌விர‌‌ம்!

வடமேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் தீவிரமடைந்து மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து ஒரிசா மாநிலம் கட்டாக் அருகே மையம் கொண்டுள்ளது!

இது மேலும் வடமேற்கு நோக்கி நகரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் அடுத்த 12 மணி நேரத்திற்கு ஒரிசா, மேற்கு வங்கத்தின் கரையோரப் பகுதிகளில் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலிற்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு ஆந்திராவின் வடக்கு கரையோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.

அஜித்-விஜய் 50-50

அஜித்தும்-விஜயும் அடுத்தடுத்து நடிக்கப் போகும் படங்கள் ஐம்பதாவது படங்கள் என்பதால் அவரவரின் ரசிகர் மன்றத்தினர் பரபரப்பாகிவிட்டார்கள்.

பிரபுதேவா இயக்கிக் கொண்டிருக்கும் படமான 'வில்லு' விஜயின் 49வது படம். ஐம்பதாவது படத்தை யார் இயக்கப் போவது என்ற போட்டியில் ஜெயித்திருப்பது எஸ்.ஏ. சந்திரசேகரன்.

விஜயின் ஐம்பதாவது படத்துக்கான அதிரடியான கமர்ஷியல் கதையை எப்போதே ரெடி செய்து வைத்துவிட்டேன். தலைப்பு 'வேட்டைக்காரன்'. இது ஏற்கனவே எம்.ஜி.ஆர். படத்தலைப்பு. விஜய்காக தேர்வு செய்தேன் என்கிறார்.

அதேபோல், தற்போது அஜித் நடிக்கும் ஏகன் படம் 48வது படம். இதையடுத்து சிவாஜி புரொடக்சன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அடுத்ததாக 50வது படத்தை இயக்கப் போவது யார் என்றும், தயாரிக்கும் பேனர் பற்றியும் விரைவில் வெளிவர வருகிறது.

இதற்கிடையில் ஐம்பதாவது படமாக இந்தியில் சயீஃப் அலிகான் நடித்து வெற்றி பெற்ற 'ரேஸ்' படத்தை தமிழில் எடுக்கவும், அஜித் நடிக்கவும் விஜய் அமிர்தராஜ் கேட்க, ஐம்பதாவது படம் ரீ-மேக் இல்லாத படத்தில்தான் நடிக்க வேண்டுமென்கிற தன் விருப்பத்தை 'தல' சொல்ல, 51வது படமாக ரேஸ் தயாராக உள்ளது.


இந்தியாவில் புகை‌ப் ‌பிடி‌ப்பதா‌ல் இற‌ப்போ‌ர் எண்ணிக்கை அதிகரி‌க்கு‌ம்!

இ‌ந்‌தியா‌வி‌ல் 2010 ஆ‌ம் ஆ‌ண்டுக‌ளி‌ல், புகைப் ‌பிடி‌ப்பதா‌ல் ஆ‌‌ண்டுதோறு‌ம் 10 ல‌ட்ச‌‌ம் பே‌ர் ப‌லியாக‌க்கூடு‌ம் எ‌ன்று ஆ‌ய்வு தெ‌ரி‌வி‌க்‌கிறது!

2006-07இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 57 ‌விழு‌க்காடு ஆண்களும், 10.9 ‌விழு‌க்காடு பெண்களும் புகையிலையை பல்வேறு வடிவங்களில் பயன்படுத்துகின்றனர்.

உலக இளைஞர் புகையிலை கணக்கெடுப்பு 2006-இன் படி,

13-15 வயதிற்குட்பட்ட சிறுவர்களில் 14 ‌விழு‌க்கா‌ட்டின‌ர் புகையிலையை பயன்படுத்துகின்றனர்.

15 ‌‌‌விழு‌க்கா‌டு புகை பிடிக்காதவர்கள் அடுத்த ஆண்டிலேயே புகை பிடிக்க துவங்கிவிடுகின்றனர்.

40 ‌விழு‌க்கா‌ட்டின‌ர் பொது இடங்களில் புகை பிடிக்கின்றனர்.

70 ‌விழு‌க்காடு மாணவர்கள் பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்ய வேண்டுமென்று விரும்புகின்றனர்.

இங்கிலாந்து நாட்டு மருத்துவ இதழ் மேற்கொண்ட ஆய்வின்படி, இந்தியாவில் 2010-களில், ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புகை பிடிப்பதால் இறந்து விடுவார்கள்.

உடனடி நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் 2030ஆம் ஆண்டில் புகையிலையினால் ஆண்டுதோறும் இறப்பவர்களின் எண்ணிக்கை 80 லட்சத்திற்கும் அதிகமாகப் பெருகிவிடும்.

இ‌‌ந்‌தியா- வ‌ங்கதேச‌ம் கட‌ல் எ‌ல்லை‌ப் பே‌ச்சு உட‌ன்பாடு இ‌ன்‌றி முடி‌ந்தது!

வ‌ங்க‌க் கட‌லி‌ல் எ‌ல்லை ‌பி‌ரி‌‌த்து‌க்கொ‌ள்வது தொட‌ர்பாக இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ம் வ‌ங்கதேச‌த்‌தி‌ற்கு‌ம் இடை‌யி‌ல் கட‌ந்த மூ‌ன்று நா‌ட்களாக நட‌ந்த தொ‌ழி‌ல்நு‌ட்ப அள‌விலான பே‌ச்சு உட‌ன்பாடு ஏது‌மி‌ன்‌றி முடி‌ந்தது.

இர‌ண்டு நாடுகளு‌க்கு‌ம் பொதுவான ஹ‌ரியப‌ங்கா ஆ‌‌ற்று முக‌த்துவார‌த்‌தி‌ல் எ‌ல்லை ‌பி‌ரி‌ப்ப‌தி‌ல் கரு‌த்துவேறுபாடு ஏ‌ற்ப‌ட்டதே பே‌ச்‌சி‌ல் உட‌ன்பாடு ஏ‌ற்படாதத‌‌ற்கு காரண‌ம் எ‌ன்று செ‌ய்‌திக‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

வ‌ங்க‌க் கட‌லி‌ல் எ‌ல்லை ‌பி‌ரி‌த்து‌க்கொ‌ள்வது தொட‌ர்பாக இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ம் வ‌ங்கதேச‌த்‌தி‌ற்கு‌ம் இடை‌யி‌‌ல் தொ‌ழில‌்நு‌ட்ப அள‌விலான பே‌ச்சு வ‌ங்கதேச‌த் தலைநக‌ர் டா‌க்கா‌வி‌ல் கட‌ந்த மூ‌ன்று நா‌ட்களாக நட‌ந்து வ‌ந்தது. காரசாரமான ‌விவாத‌ங்க‌ள் ‌நிறை‌ந்த இ‌ந்த‌ப் பே‌ச்சு இ‌ன்று உட‌ன்பாடு ஏது‌மி‌ன்‌றி முடி‌ந்தது.

இத‌ன்‌பிறகு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌‌ந்‌தி‌த்த வ‌ங்கதேச கூடுத‌ல் அயலுறவு‌ச் செயல‌ர் எ‌ம்.ஏ.கே.முகமது செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பேசுகை‌யி‌ல், "இர‌ண்டு நாடுகளு‌க்கு‌ம் இடை‌யி‌ல் பொது‌வாக உ‌ள்ள ஹ‌ரியப‌ங்கா ஆ‌ற்‌றி‌ன் ‌நீரோ‌ட்ட‌ம் தொட‌ர்பாக எ‌ங்களு‌க்கு‌ள் கரு‌த்து வேறுபாடு உ‌ள்ளது." எ‌ன்றா‌ர்.

பே‌ச்சை முடி‌‌த்து‌க்கொ‌ண்டு வேகமாக வெ‌ளியே‌றிய இ‌ந்‌திய‌க் குழு‌வி‌ன் தலைவ‌ர் ‌பி.ஆ‌ர்.ரா‌‌‌வ், "நா‌ங்க‌ள் ஒரு அ‌ற்புதமான ‌விவா‌த‌த்தை நட‌த்‌தியு‌ள்ளோ‌ம். ப‌ல்வேறு கரு‌த்து‌க்க‌ள், வா‌ய்‌ப்புக‌ள் கு‌றி‌த்து நா‌ங்க‌ள் ப‌ரி‌சீலனை செ‌ய்தோ‌ம்." எ‌ன்றா‌ர்.

ஹ‌ரியப‌ங்கா ஆ‌ற்‌றி‌ன் ம‌த்‌திய ‌நீரோ‌ட்ட‌ம் ‌கிழ‌க்கு‌த் ‌திசை‌யி‌ல் உ‌ள்ளது எ‌ன்று கூ‌றியு‌ள்ள இ‌ந்‌தியா அத‌ற்கான ஆதார‌ங்களையு‌ம் சம‌ர்‌ப்‌பி‌த்து‌ள்ளது. ‌நீரோ‌ட்ட‌ம் வட‌க்கு த‌ல்ப‌ட்டி பகு‌தி‌யி‌ல்தா‌ன் உ‌ள்ளது எ‌ன்று கூ‌றிய வ‌ங்கதேசமு‌ம் அத‌ற்கான ஆதார‌ங்களை‌ச் சம‌ர்‌ப்‌பி‌த்து‌ள்ளது.

இ‌தி‌ல், மேலே கு‌றி‌ப்‌பிட‌ப்ப‌ட்டு‌ள்ள த‌ல்ப‌ட்டி ‌தீவு கட‌ல் பகு‌தி யாரு‌க்‌கு‌ச் சொ‌ந்த‌ம் எ‌ன்ப‌தி‌ல் கட‌ந்த பல ஆ‌ண்டுகளாக இரு நாடுகளு‌க்கு‌ம் இடை‌யி‌ல் ‌பிர‌ச்சனை இரு‌ந்து வரு‌கிறது. இத‌ற்‌கிடை‌யி‌ல் ஹ‌ரியப‌ங்கா ஆறு பலமுறை தனது போ‌க்கை மா‌‌ற்‌றி‌க்கொ‌ண்டு‌ள்ளதா‌ல் ‌பிர‌ச்சனை இ‌ன்னு‌ம் ‌சி‌க்கலா‌கியு‌ள்ளது.