Search

Custom Search

Tuesday, November 18, 2008

போரை ந‌ிறு‌த்த வ‌லியுறு‌த்‌தி 25இ‌ல் முழு அடைப்பு: அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு!

இல‌ங்கை‌யி‌‌ல் நடைபெ‌று‌ம் போரை நிறுத்த மத்திய அரசு, அ‌ந்நா‌ட்டை வற்புறுத்த வ‌லியுறு‌த்‌தி
வரு‌ம் 25ஆ‌ம் தே‌தி த‌மிழக‌ம் முழுவது‌ம்
முழு அடை‌ப்பு நட‌த்த ச‌ெ‌ன்னை‌யி‌ல்
இ‌ன்று ந‌ட‌ந்த அனை‌த்து‌க் க‌ட்‌சி
கூ‌டட‌த்‌தி‌ல் முடிவு
செ‌ய்ய‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.


இலங்கையில்
போர் நிறுத்தம் கிடையாது என்று அந்நாட்டு அதிபர் ராஜபக்சே திட்டவட்டமாக
அறிவித்துள்ளதையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து
ஆலோ‌சி‌க்க இ‌ந்‌‌திய
க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் க‌ட்‌சி
சா‌ர்‌பி‌ல் அனைத்து கட்சி கூட்ட‌ம் சென்னை தி.நகரில்
உள்ள ஒரு ஓட்டலில் இ‌ன்று நட‌ந்தது.


இ‌ந்த
கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு, பா.ம.க., ம.தி.மு.க., அ‌கில
இ‌ந்‌திய சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம் உ‌ள்பட
பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கலந்து கொண்டன.


இ‌ன்று
காலை 11ம‌ணியள‌வி‌ல் கூட்டம் தொடங்கியதும்
‌சி‌றில‌ங்க ராணுவ‌த்‌தி‌ன்
க‌ண்மூடி‌த்தனமாக தாக்குதலுக்கு உ‌ள்ளா‌கி பலியான
அ‌ப்பா‌வி‌த் தமிழர்களுக்கு இரங்கல் தெரிவித்து மவுன
அஞ்சலி செலுத்தப்பட்டது.


பி‌ன்ன‌ர்,
கூட்டம் முடிந்தது‌‌ம்
செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய
இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட்
க‌ட்‌சி‌யி‌ன் மா‌‌நில செயல‌ர்
தா.பாண்டியன் கூறுகை‌யி‌ல், இலங்கையில் போரை உடனடியாக நிறுத்த
வேண்டும் என்று ஒருவரி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்
‌எ‌ன்றா‌ர்.


போரை
நிறுத்த மத்திய அரசு இலங்கையை வற்புறுத்த வேண்டு‌ம் எ‌ன்று
வ‌லியுறு‌த்‌தி வரு‌ம் 25ஆ‌ம் தேதி
தமிழ‌க‌த்‌தி‌ல் முழு அடைப்பு நடத்த முடிவு
செய்யப்பட்டுள்ளது எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.


மேலு‌ம்
அ‌‌ன்றை ‌தின‌ம் பேரு‌ந்து,
ர‌யி‌ல்க‌ள் ஓடாது. கடைகள் அடைக்கப்படும். அனைத்து
நிறுவனங்களும் இயங்காது எ‌ன்று கூ‌‌றிய அவ‌ர், இதற்கு
மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எ‌ன்று
கே‌ட்டு‌க்கொ‌ண்டா‌ர்.


இ‌ந்‌திய
க‌ம்யூனி‌ஸ்‌ட் க‌ட்‌சி
சா‌ர்‌பி‌ல் நட‌த்த‌ப்ப‌ட்ட இந்த‌க்
கூட்டத்தில் தி.மு.க.,
அ.இ.அ.தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்‌ட் கம்யூனிஸ்‌ட், பாரதீய ஜனதா, தே.மு.தி.க., ஆகிய முக்கிய கட்சிகள் ப‌ங்கே‌ற்க‌வி‌ல்லை.

செயற்கைக்கோள் ஏவ யுஏஈ ஆயத்தம்!

ஐக்கிய அரபு குடியரசு தனது முதலாவது செயற்கைக்கோளை அடுத்த 6 மாதத்தில் ஏவ திட்டமிட்டுள்ளது.

மாறிவரும்
பூகோள மாற்றத்திற்கு ஏற்ப தங்களது அடிப்படை புவி ஆதாரங்களை ஆய்வு
செய்வதற்காக சுமார் மில்லியன் டாலர் மதிப்பில் இந்த செயற்கைக்கோள்
தயாரிக்கப்பட்டு வருவதாக ஐக்கிய அரசு குடியரசின் விண்வெளி தொழில்நுட்ப
அமைப்பின் திட்ட மேலாளர்கள் அபுதாபியில் நேற்று தெரிவித்தனர்.


கஜகஸ்தானில் உள்ள பைகோனூரில் இருந்து இந்த செயற்கைக்கோளை ஏவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.

கடந்த
ஜூலை மாதமே இந்த செயற்கைக்கொள் தயாராகி இருக்க வேண்டும். ஆனால், பல்வேறு
காரணங்களினால் அது தள்ளிப் போனதாகவும் அவர்கள் தெரிவித்
தனர்.

சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைந்தது என்டோவர்!

அமெரிக்காவின்
கென்னடி ஏவுதளத்தில் இருந்து கடந்த வெள்ளியன்று விண்ணில் ஏவப்பட்ட
எண்டோவர் விண்கலம், சர்வதேச விண்வெளி மையத்துடன் இன்று அதிகாலை
வெற்றிகரமாக இணைந்தது.


இந்திய
நேரப்படி அதிகாலை 3.31 மணிக்கு (திட்டமிட்டதை விட 3 நிமிடங்கள் முன்பாக)
விண்வெளியில் உள்ள மிதக்கும் ஆய்வுக்கூடத்துடன் என்டோவர் இணைந்ததாக நாசா
தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டது.


என்டோவர்
விண்கலத்தில் சென்ற 7 விண்வெளி வீரர்களும், இணைப்பு பாதை வழியாக மிதக்கும்
ஆய்வுக்கூடத்துக்குள் நுழைந்தனர். ஏற்கனவே விண்வெளி ஆய்வு மையத்தில்
தங்கியிருந்த வீரர்கள், அவர்களை கட்டித்தழுவி வரவேற்றனர்.


விண்வெளி
மையத்துடன் இணைக்கப்படுவதற்கு முன்னதாக, என்டோவர் கமாண்டர் கிரிஸ்
ஃபெர்குஸன் விண்கலத்தை குட்டிக்கரணம் அடிக்கச் செய்தார். அப்போது
விண்கலத்தின் அடிப்பகுதியில் உள்ள வெப்பத் தடுப்புத் தகடுகள் பல இடங்களில்
பெயர்ந்திருந்தது தெரியவந்தது.


இதன்
காரணமாக என்டோவர் மீண்டும் பூமிக்குத் திரும்பும் போது வெப்பம் அதிகரித்து
வெடித்துச் சிதறலாம் என கூறப்பட்டாலும் நாசா அதனை மறுத்துள்ளது.
பூமிக்குத் திரும்பும் முன்பாக விண்வெளி வீரர்கள் வெப்பத் தகடுகளை
சீரமைத்து விடுவர் எனபதால் தரையிறங்கும் போது ஆபத்து ஏதும் ஏற்படாது என
நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


சுமார்
ஒருவார காலத்திற்கும் அதிகமாக விண்வெளியில் தங்கும் வீரர்கள், மிதக்கும்
ஆய்வுக் கூடத்திற்கு தேவையான உபகரணங்களை சீரமைப்பது, பொருத்துவது உள்ளிட்ட
பணிகளுக்கு 4 முறை விண்வெளியில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளனர்.


இந்த விண்கலத்தில் சென்றுள்ள வீராங்கனை சாண்ட்ரா மாக்னஸ், விண்வெளி ஆய்வுக் கூடத்திலேயே தங்கி விடுவார். அவருக்கு
பதிலாக ஏற்கனவே விண்வெளி மையத்தில் தங்கியிருந்த மற்றொரு வீரர் என்டோவரில்
பூமிக்குத் திரும்புவார் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.

மாங்குளம் கைப்பற்றப்பட்டதாக சிறிலங்க ராணுவம் அறிவிப்பு

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வ‌ந்த மாங்குளம், பணிச்சங்கேணி பகுதிகளை சிறிலங்க ராணுவம் கைப்பற்றியுள்ளதாக சிறிலங்க பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது!

இதுகுறித்து
சிறிலங்க பாதுகாப்பு அமைச்சகப் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல கூறுகையில்,
கடந்த 48 மணி நேரத்திற்கும் மேலாக விடுதலைப் புலிகளுடன் நடந்த கடும்
மோதலிற்குப் பிறகு ஏ-9 முக்கிய சாலை வழியாக ராணுவத்தினர் மாங்குளம்
பகுதியை கைப்பற்றியுள்ளதாகவும், ஒட்டிச்சுட்டான் பகுதிக்கு செல்லும் சாலை
துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.


மாங்குளம்
கைப்பற்றப்பட்டுள்ளதையடுத்து விடுதலைப் புலிகளுக்கான முக்கிய வழங்கல் பாதை
தடைபட்டுள்ளதாகவும் அமைச்சர் கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.


இதற்கிடையே, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கு‌மிழமுனை கிராமத்தை ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக ராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.