Search

Custom Search

Sunday, January 11, 2009

பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்: லாரி உரிமையாளர்களுக்கு அமைச்சர் பாலு அழைப்பு

டீசல் விலை
குறைப்பு, வாகன வரி குறைப்பு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இன்றுடன் கடந்த
6 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் லாரி உரிமையாளர்களை
பேச்சுவார்த்தை நடத்த வருமாறு சாலை போக்குவரத்து அமைச்சர் டி.ஆர். பாலு
அழைத்துள்ளார்.


லாரி
உரிமையாளர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டும், அவர்கள் மீது
கடுமையான நடவடிக்கைகளை எடுக்காதது ஏன் என்று டெல்லியில் இன்று
செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர் பாலு, கடுமையான
நடவடிக்கைகளை மேற்கொண்டு பிரச்சனையை மேலும் சிக்கலாக்க தான் விரும்பவில்லை
என்று கூறினார்.


“எனது
அமைச்சகத்தில் அவர்களும் ஒரு அங்கம்தான், கடுமையான நடவடிக்கைகள் எடுத்து
பிரச்சனையை மேலும் சிக்கலாக்க விரும்பவில்லை. அவர்கள் இப்போதும் அரசுடன்
பேச்சுவார்த்தை நடத்த வரலாம
்” என்று
கூறிய பாலுவிடம், கைது செய்யப்பட்டுள்ள தங்கள் அமைப்பின் நிர்வாகிகளை
விடுதலை செய்தால்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று அவர்கள்
கூறியிருப்பதை செய்தியாளர்கள் சுட்டிக்காட்டியதற்கு, அகில இந்திய மோட்டார்
வாகன போக்குவரத்து காங்கிரஸ் அமைப்பின் தலைவர் சரன்சிங் லோஹராவும், செயலர்
வேணுகோபாலும்தான் கைது செய்யப்பட்டுள்ளனர், மற்றவர் வந்து அரசுடன் பேசலாமே
என்று கூறினார்.


லாரி
உரிமையாளர்களின் தொடர் வேலை நிறுத்தத்தையடுத்து அத்யாவசிய சேவைகள்
பராமரிப்பு சட்டத்தினை பிரகடனம் செய்த மத்திய அரசு, அரசு உரிமம் பெறாத
லாரிகளை அத்யாவசிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

நிதி மோசடி ராமலிங்க ராஜூ கைது

சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் நடைபெற்ற நிதி முறைகேடுகளை ஒப்புக்கொண்டு, தலைவர் பதவியிலிருந்து விலகிய பி. ராமலிங்க ராஜூவும், அவரது சகோதரர் ராமராஜூவும் ஹைதராபாத்தில் நேற்றிரவு கைது செய்யப்பட்னர்.

ராமராஜூ சத்யம் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனர் பொறுப்பில் இருந்து வந்தார். ஆந்திர மாநில போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் மும்பை பங்குப் பரிவர்த்தனைக் கழக (செபி) அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தவுள்ளனர்.

ராமலிங்க ராஜூ
webdunia photoFILE
ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து பி. ராமலிங்க ராஜு புதன்கிழமையன்று விலகினார். அந்த நிறுவனத்தில் 7 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு நிதி முறைகேடுகள் நடந்திருப்பதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

அவரது சகோதரரும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான ராமராஜுவும் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இதையடுத்து
அந்த நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. அந்த நிறுவனம்
தொடர்ந்து செயல்படுவதில் கடும் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள்
மீது நடவடிக்கை எடுக்க ஆந்திர அரசும், மத்திய அரசும் முடிவு செய்தன.


இதைத் தொடர்ந்து முதல்கட்டமாக சத்யம் கம்ப்யூட்டர் விவகாரம் குறித்து இந்திய பங்குப் பரிவர்த்தனைக் கழகம் (செபி) மூலம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.

செபி விசாரணைக் குழு முன் ராமலிங்க ராஜுவின் வழக்கறிஞர் நேற்று ஆஜரானார். தேவைப்பட்டால் குழுவினர் முன் ராஜுவும் ஆஜராகி தகவல்களை அளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஹைதராபாதில்
ராஜு தங்கியிருப்பதாகவும் தேவைப்பட்டால் குழுவினர் முன் ஆஜராகி தகவல்களை
அளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


இந்த நிலையில் ராமலிங்க ராஜு, அவரது சகோதரர் ராமராஜு இருவரையும் போலீôர் திடீரென கைது செய்தனர்.

நிதி
மோசடி, சதி, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குத்
தொடரப்பட்டுள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
என்று ஆந்திர காவல்துறை தலைவர் எஸ்.எஸ்.பி. யாதவ்
தெரிவித்தார்.

சத்யம் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி வல்தாமணி ஸ்ரீனிவாசன் சனிக்கிழமை கைது செய்யப்படுவார் என்றும் அவர் கூறினார்.