Search

Custom Search

Saturday, February 21, 2009

சிங்களப் படையினருக்கு சிகிச்சை: மருந்து அனுப்புகிறது இந்தியா!

சிங்களப் படையினருக்கு சிகிச்சையளிக்க பயன்படும், உயிர்காக்கும் 'பெத்தடின்' மருந்துகளை இலங்கைக்கு அனுப்புவதற்கு இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

இலங்கை
நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய மார்க்சிஸ்ட் ஜேவிபி கட்சி உறுப்பினர்
ஒருவர், ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் 'பெத்தடின்'
உயிர்க்காக்கும் மருந்துகள் தற்போது பற்றாக்குறையாக இருப்பதாக கவலை
தெரிவித்தார்.


இதற்கு
பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் நிர்மல் சிரிபாலா டே கூறுகையில்,
"தற்போதைய போர் காரணமாக, 'பெத்தடின்' மருந்து வெகுவிரைவில்
காலியாகிவிட்டது. இதனால் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த மருந்துக்கு
பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது" என்றார்.


"எனினும்,
இந்த மருந்துகளை அனுப்பிவைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி,
இன்னும் சில தினங்ளில் மருந்துகள் இலங்கை வந்து சேரும்" என்றும் அவர்
தெரிவித்தார்.


இலங்கைப் போரில் படுகாயம் அடையும் ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 'பெத்தடின்' பயன்படுத்தப்படுகிறது.
படுகாயம் அடையும் ராணுவ வீரர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்வதற்கு முன்பாக
இந்த மருந்து கொடுக்கப்படுகிறது. இது சிறந்த வலி நீக்கியாகவும், உயிர்
காக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வன்னி: எறிகணைத் தாக்குதலில் 46 தமிழர்கள் பலி!

வன்னி: எறிகணைத் தாக்குதலில் 46 தமிழர்கள் பலி!..
இலங்கையின் வன்னிப்
பகுதியில் சிறிலங்கப் படையினர் இன்று அதிகாலையில் இருந்து தொடர்ந்து
நடத்திவரும் எறிகணைத் தாக்குதலில் 46 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 126
பேர் காயமுற்றுள்ளனர்.

Faa Photo

வன்னியில்
மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் மட்டும்
நேற்று நள்ளிரவு 1 மணி முதல் சிறிலங்க இராணுவம் நடத்திய தாக்குதலில் 24
தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட இடங்களிலேயே அவர்களின்
உடல்களை உறவினர்கள் அடக்கம் செய்தனர்.


இதேபோல்
இரணைப்பாலை, ஆனந்தபுரம், வலஞர்மடம் ஆகிய இடங்களில் உள்ள மக்கள்
குடியிருப்புகளை நோக்கி நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதல்களில் மேலும் 10
பேர் கொல்லப்பட்டனர். 70 பேர் காயமுற்றனர்.


புதுக்குடியிருப்பில்
உள்ள பொக்கணை என்ற பகுதியின் மீது இன்று காலை முதல் சிறிலங்கப் படையினர்
நடத்திய தாக்குதலி்ல் மேலும் 12 பேர் கொல்லப்பட்டனர். 56 பேர்
காயமுற்றுள்ளனர்.

faa Photo

இந்த
ஆண்டின் துவக்கத்திலிருந்து கடந்த 15ஆம் தேதிவரை சிறிலங்க படையினரின்
தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,316 பேர்,
படுகாயப்படுத்தப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 4,059. இவர்கள் மட்டுமின்றி,
சிங்களப் படைகளால் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 304.


புதுக்குடியிருப்பை வளைத்து விட்டோம்: சிறிலங்க அரசு

முல்லைத்தீவுப்
பகுதியில் உள்ள முக்கிய நகரமான புதுக்குடியிருப்பை சுற்றி
வளைத்துவிட்டதாகவும், அம்பலவாணன்பொக்கை என்ற நகர்புறத்தை
கைப்பற்றியுள்ளதாகவும் சிறிலங்க அரசு கூறியுள்ளது.


விடுதலைப்
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நகரமான புதுக்குடியிருப்பை கைப்பற்ற
இன்று நடந்த கடும் சண்டையில், புலிகளின் இரண்டு மூத்த தளபதிகள்
கொல்லப்பட்டதாகவும், நீரில் மூழ்கப் பயன்படுத்தப்படும் சில உபகரணங்களைக்
கைப்பற்றியுள்ளதாகவும் சிறிலங்க அரசின் இராணுவ பேச்சாளர் உதய நாணயக்காரா
கூறியுள்ளார்.

இந்தியா, அமெரிக்காவுக்கு ஆபத்தாக திகழும் தாலிபான்கள்: ஜர்தாரி

இந்தியா, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு தாலிபான்கள் மிகப்பெரிய ஆபத்தாக திகழ்வதாக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான்
மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதராக
நியமிக்கப்பட்டுள்ள ரிச்சர்ட் ஹோல்ப்ரூக், சமீபத்தில் ஆப்கானிஸ்தான்,
பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விட்டு வாஷிங்டன்
திரும்பியுள்ளார்.


தனது,
சுற்றுப்பயணம் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள
பேட்டியில், "பாகிஸ்தான் அரசுக்கும், தாலிபான் பயங்கரவாத அமைப்பினருக்கும்
இடையே செய்யப்பட்டுளள் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்தும், வடமேற்கு
மாகாணங்களில் ஷாரியா சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது
குறித்தும் அமெரிக்காவின் கவலையை
ஜர்தாரியிடம் தெரிவித்தேன்" என்றார்.

இந்த ஒப்பந்தங்களால், தாலிபான் பயங்கரவாதிகள், பாகிஸ்தானுக்கு மட்டுமல்; இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் ஆபத்தாக திகழ்வதாக ஜர்தாரியிடம் கூறியதாக அவர் தெரிவித்தார்.

இதை ஜர்தாரி மறுக்கவில்லை என்றும்,
இதுதொடர்பாக, பாகிஸ்தான் வேறு திட்டம் எதுவும் வைத்திருக்கிறதா என்பதும்
எனக்கு தெரியவில்லை. ஆனால், இதுகுறித்து பாகிஸ்தான் அரசு தீவிர ஆலோசனை
நடத்தி வருகிறது என்றும் ரிச்சர்ட் ஹோல்ப்ரூக் தெரிவித்தார்.